இலங்கைத் தேவி தன்வரலாறு கூறுதல் அறுசீர் விருத்தம் 4927. | ‘ஐய ! கேள்; வையம் நல்கும் அயன் அருள்அமைதியாக எய்தி, இம்மூதூர் காப்பென்; இலங்கைமாதேவி என்பேர்; செய்தொழில்இழுக்கி னாலே, திகைத்து,இந்தச் சிறுமை செய்தேன் ‘உய்தி’ என்றுஅளித்தி யாயின், உணர்த்துவல் உண்மை’ என்றாள். |
ஐய - ஒப்பற்றவனே;வையம் நல்கும் அயன் - உலகம் படைத்த பிரம்ம தேவனின்; அருள் - திருவருளே; அமைதியாக - கட்டளையாக; இம்மூதூர் எய்தி - இந்த பழமையான இலங்கையடைந்து; காப்பென் - பாதுகாத்து வந்தேன்; என்பேர் - என்னுடைய பெயர்; இலங்கைமாதேவி - இலங்கைத் தேவி; செய்தொழில் - மேற்கொண்ட காவல் தொழிலில்; இழுக்கினாலே - தவறு நேர்ந்தபடியால்; திகைத்து - மனங்கலங்கி; இந்தச் சிறுமை செய்தேன் - இந்த அற்பச் செயலைச் செய்தேன்; உய்தி என்று - (நீ) தப்பிப்போ; ! என்று; அளித்தியாயின் - அருள்செய்வாயேயானால்; உண்மை உணர்த்துவல் -உண்மையைக் கூறுவேன்; என்றாள் - என்று கூறினாள். (93) 4928. | எத்தனைகாலம் காப்பென் யான் இந்தமூதூர் ? என்று, முத்தனை வினவினேற்கு, ‘முரண்வலிக் குரங்கு ஒன்று உன்னைக் கைத்தலம்அதனால் தீண்டிக், காய்ந்தஅன்று, என்னைக் காண்டி; சித்திர நகரம்,பின்னை சிதைவதுதிண்ணம்’ என்றான். |
யான் - நான்; இந்தமூதூர் - இந்தப் பழமையான இலங்கையை; எத்தனை காலம் காப்பென் - எவ்வளவு காலம் பாதுகாப்பேன்; என்று - என்று; முத்தனை வினவினேற்கு - |