பக்கம் எண் :

130சுந்தர காண்டம்

வினைகளைக்கடந்தபிரம்ம தேவனை வினாவிய என்னிடம்; (அந்த முத்தன்)
முரண் வலி - பெரு வலி பெற்ற; குரங்கு ஒன்று -  ஒரு குரங்கு; உன்னை
-
(இலங்கைக் காவலை மேற்கொண்ட) உன்னை; கைத்தலம் அதனால் தீண்டி- தன்னுடைய கைகளால் தொட்டு; காய்ந்த அன்று - சினம்
கொண்டகாலத்தில்; என்னைக் காண்டி - என்னைப் பார்ப்பாய்; பின்னை -
பிறகு;சித்திர நகரம் - அழகிய இலங்கை நகரம்; சிதைவது திண்ணம்
என்றான் -
அழிவது உறுதி என்று கூறினான்.

    காளிதாசன்பிரம்மதேவனைப் பரம் பொருள் என்பான் (குமாரசம்பவம்)
முத்தன் - பரமன். இராமனை முத்தனார் என்பார் (கும்ப 261)        (94)

4929.

அன்னதேமுடிந்தது ஐய!
     ‘அறம்வெல்லும் பாவம் தோற்கும்’
என்னும் ஈதுஇயம்ப வேண்டும்
     தகையதோ ?இனி மற்று உன்னால்,
உன்னிய எல்லாம்முற்றும்,
     உனக்கும்முற்றாதது உண்டோ ?
பொன்நகர் புகுதிஎன்னாப் புகழ்ந்து
     அவள்இறைஞ்சிப் போனாள்.

     ஐய - ஐயனே!;அன்னதே - பிரம்மனின் சொல்லே; முடிந்தது -
நிறைவேறியது; அறம் வெல்லும் பாவம் தோற்கும் - தர்மம் வெல்லும்
பாவம் தோல்வியடையும்; என்னும் ஈது - என்று பேசப்படும் சத்திய வசனம்;
இயம்ப - ஒருவர் மற்றவர் எடுத்துக் கூறுதலை; வேண்டும் தகையதோ -
அவாவி நிற்கும் எளிய நிலையிலிருப்பதா ?; இனி - இனிமேல்; உன்னால் -
உன்னாலே; உன்னிய எல்லாம் - நினைக்கப்படும் எல்லாச் செயல்களும்;
முற்றும் - நிறைவேறும்; உனக்கும் - உன்னாலேயும்; முற்றாதது - செய்ய
முடியாத செயல்; உண்டோ - உள்ளதா ?; பொன் நகர் புகுதி -
பொன்மயமான இலங்கைக்குள் புகுக; என்னா - என்று; புகழ்ந்தவள் -
அனுமனைப் புகழ்ந்த இலங்கைத் தேவி; இறைஞ்சிப் போனாள் - வணங்கிச்
சென்றாள்.                                                (95)

                    இலங்கையுள்அனுமன் புகுதல்

4930.

வீரனும்விரும்பி நோக்கி
    மெய்ம்மையே; விளைவும் அஃது என்று