| தோன்றினன்கொல்லோ ? என்னா அறிவனும்துணுக்கம் கொண்டான். |
மைஅறு மணியில்செய்த - குற்றம் அற்ற மணிகளால் அமைக்கப் பெற்ற; வான்தொடர் - ஆகாயம் அளாவிய; மாடகோடி - மாளிகையின் சிகரம்; ஆன்ற - எங்கும் நிரம்பியிருக்கின்ற; பேர் இருளை - மிக்க இருளை; சீத்து - போக்கி; பகல் செய்த - ஒளியைத் தோற்றுவித்த; அழகை நோக்கி - தன்மையைப் பார்த்து; அறிவனும் - அறிஞனாகிய அனுமனும்; வான் - வானத்தில் இயங்கும்; ஒற்றை உருளைத் தேரோன் - ஒரு சக்கரத்தால் இயங்கும் தேரையுடைய சூரியன்; ஊன்றிய - நிலைத்த; உதயத்து உச்சி - உதயகிரியின் சிகரத்திலே; தோன்றினன் கொல் - உதித்து விட்டானோ; என்று - என்று நினைத்து; துணுக்கம் கொண்டான் - திடுக்கிட்டான். மாடம் -உதயகிரி. மாடகோடி - சூரியன். பகல் - ஒளி - பகற்காலம். ‘பகல் கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி (பழம்பாட்டு) மாடம் - மாளிகை. கோடி - உச்சி (சிகரம்) (97) 4932. | மொய்ம்மணி மாட மூதூர், முழுது இருள் அகற்றா நின்ற, மெய்ம்மையைஉணர்ந்து, நாணா ‘மிகை’ எனவிலங்கிப் போனான்; இம்மதில்இலங்கை நாப்பண் எய்துமேல்,தன்முன் எய்தும் மின்மினி அல்லனோ, அவ் வெயிற்கதிர் வேந்தன்? அம்மா! |
மொய் - நெருங்கிய; மணி - மணிகளால் அமைக்கப் பெற்ற; மாட மூதூர் - மாடங்கள் நிரம்பிய இலங்கை நகர்; முழுது இருள் - எல்லா இருளையும்; அகற்றா நின்ற - நீக்குகின்ற; மெய்ம்மையை - பிரத்தியட்சமானஉண்மையை; உணர்ந்து - அறிந்து; வெயில் கதிர் வேந்தன் - வெயிலையும்கிரணத்தையும் உடைய சூரியன்; நாணா - வெட்கம் அடைந்து; மிகை என -(நாம் இங்கு) அதிகப்படி என்று கருதி; விலங்கிப் போனான் - ஒதுங்கிப்போய்விட்டான்; (அவன் நாணம் இல்லாமல்) மதில் - மதில்களால்சூழப்பெற்ற; இ - இந்த; இலங்கை நாப்பண் - இலங்கைக்கு நடுவிலே; எய்துமேல் - வருவானேயாயின் (அவன்); தன்முன் எய்தும் - தனக்கு முன்னே(அறிவின்றி) வந்த; மின்மினி |