பக்கம் எண் :

132சுந்தர காண்டம்

 

தோன்றினன்கொல்லோ ? என்னா
     அறிவனும்துணுக்கம் கொண்டான்.

     மைஅறு மணியில்செய்த - குற்றம் அற்ற மணிகளால் அமைக்கப்
பெற்ற; வான்தொடர் - ஆகாயம் அளாவிய; மாடகோடி - மாளிகையின்
சிகரம்; ஆன்ற - எங்கும் நிரம்பியிருக்கின்ற; பேர் இருளை - மிக்க இருளை;
சீத்து - போக்கி; பகல் செய்த - ஒளியைத் தோற்றுவித்த; அழகை நோக்கி
-
தன்மையைப் பார்த்து; அறிவனும் - அறிஞனாகிய அனுமனும்; வான் -
வானத்தில் இயங்கும்; ஒற்றை உருளைத் தேரோன் - ஒரு சக்கரத்தால்
இயங்கும் தேரையுடைய சூரியன்; ஊன்றிய - நிலைத்த; உதயத்து உச்சி -
உதயகிரியின் சிகரத்திலே; தோன்றினன் கொல் - உதித்து விட்டானோ;
என்று - என்று நினைத்து; துணுக்கம் கொண்டான் - திடுக்கிட்டான்.

     மாடம் -உதயகிரி. மாடகோடி - சூரியன். பகல் - ஒளி - பகற்காலம்.
‘பகல் கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி (பழம்பாட்டு) மாடம் - மாளிகை.
கோடி - உச்சி (சிகரம்)                                       (97)

4932.

மொய்ம்மணி மாட மூதூர்,
     முழுது இருள் அகற்றா நின்ற,
மெய்ம்மையைஉணர்ந்து, நாணா
     ‘மிகை’ எனவிலங்கிப் போனான்;
இம்மதில்இலங்கை நாப்பண்
     எய்துமேல்,தன்முன் எய்தும்
மின்மினி அல்லனோ, அவ்
    வெயிற்கதிர் வேந்தன்? அம்மா!

     மொய் - நெருங்கிய; மணி - மணிகளால் அமைக்கப் பெற்ற; மாட
மூதூர் -
மாடங்கள் நிரம்பிய இலங்கை நகர்; முழுது இருள் - எல்லா
இருளையும்; அகற்றா நின்ற - நீக்குகின்ற; மெய்ம்மையை - பிரத்தியட்சமானஉண்மையை; உணர்ந்து - அறிந்து; வெயில் கதிர்
வேந்தன் -
வெயிலையும்கிரணத்தையும் உடைய சூரியன்; நாணா - வெட்கம்
அடைந்து; மிகை என -(நாம் இங்கு) அதிகப்படி என்று கருதி; விலங்கிப்
போனான் -
ஒதுங்கிப்போய்விட்டான்; (அவன் நாணம் இல்லாமல்) மதில் -
மதில்களால்சூழப்பெற்ற; இ - இந்த; இலங்கை நாப்பண் - இலங்கைக்கு
நடுவிலே; எய்துமேல் - வருவானேயாயின் (அவன்); தன்முன் எய்தும் - தனக்கு முன்னே(அறிவின்றி) வந்த; மின்மினி