பக்கம் எண் :

ஊர் தேடு படலம்139

 

கந்தர்ப்ப மகளிர் ஆடும்
     நாடகம்காண்கின்றாரை-

     சந்தம் -அழகிய;பூம்பந்தர் - பூவால் அமைந்த பந்தல்; வேய்ந்த -
மேற்கட்டியாக அமைந்ததும்; சிந்தித்தது உதவும் - நினைத்தவற்றை
வழங்கும்; தெய்வ - தெய்வத்தன்மை பெற்ற; மணிவிளக்கு ஒளிரும் -
மணிகள் ஒளி வீசுவதும் (ஆன); தமனிய அரங்கில் - பொன்னாலான
அரங்கத்தில்; வந்து - இசை மரபை நன்றாக அறிந்து; திருதம் ஒத்தும்
மாக்கள் -
தாளத்தை ஒத்துகின்றவர்களின்; விளம்பித நெறி - விளம்பித
வழிகள்; வழாமை - தவறுபடாமல்; கந்தர்ப்ப மகளிர் - காந்தருவப்
பெண்கள்; ஆடும் - ஆடுகின்ற; நாடகம் - நாடகத்தை; தம்தம் - தங்கள்
தங்கட்குரிய; சேக்கை - ஆசனத்தில் இருந்து கொண்டு; காண்கின்றாரை -
காண்பவராகிய அரக்க மகளிரை.

    விளக்கு, அரங்கிற்கு இன்றியமையாதது. அதை அறிந்தால் அதைக்
காணும் அவைக்குச் சேர்த்து மயங்கார் - இவ் விளக்கை மாண் விளக்கு
என்பர் அடிகள் (சிலம்பு 3 - 108) சேக்கை என்பதற்கு ‘நாயகப்பந்தி’ என்று
பொருள் கொள்ளின். சேக்கை - ஆடும் நாயகப் பத்தி. திருதம் - தாளவகை.
‘விளம்பிதம்’ என்பது தாளஒத்துக் கேற்ற கட்டுகளாகும். இசை நூற்கூறு -
‘விளம்பின’ என்றபாடம் பொருட்சிறப்பின்று.                    (106)

4941.

திருத்தியபளிக்கு வேதி
     தெள்ளியவேல்கள் என்ன
கருத்து இயல்புஉரைக்கும்
     உண்கண்கருங்கயல், செம்மைகாட்ட
வருத்தியகொழுநர் தம்பால்
     வரம்பின்றி வளர்ந்த காம
அருத்தியபயிர்க்கு நீர்போல்
     அருநறவுஅருந்து வாரை

     திருத்திய -நன்றாகஅமைக்கப் பெற்ற; பளிக்கு வேதி - பளிங்குத்
திண்ணை; தெள்ளிய வேல்கள் என்ன - கூர்மையான வேல்களைப் போல
வருத்த அதை மறக்க; கருத்து இயல்பு - மனத்தின் இயற்கையை; உரைக்கும்
-
வெளிப்படுத்துகின்ற; உண் - மை பூசப் பெற்ற; கண் கருங்கயல் -
கண்ணாகிய கயல் மீன்கள்; செம்மை காட்ட - ஊடற் சீற்றத்தால் ஆகிய,
செந்நிறத்தை வெளிப்படுத்தும்படியாக; வருத்திய - (பரத்தையின் தொடர்பால்)