| கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம்காண்கின்றாரை- |
சந்தம் -அழகிய;பூம்பந்தர் - பூவால் அமைந்த பந்தல்; வேய்ந்த - மேற்கட்டியாக அமைந்ததும்; சிந்தித்தது உதவும் - நினைத்தவற்றை வழங்கும்; தெய்வ - தெய்வத்தன்மை பெற்ற; மணிவிளக்கு ஒளிரும் - மணிகள் ஒளி வீசுவதும் (ஆன); தமனிய அரங்கில் - பொன்னாலான அரங்கத்தில்; வந்து - இசை மரபை நன்றாக அறிந்து; திருதம் ஒத்தும் மாக்கள் - தாளத்தை ஒத்துகின்றவர்களின்; விளம்பித நெறி - விளம்பித வழிகள்; வழாமை - தவறுபடாமல்; கந்தர்ப்ப மகளிர் - காந்தருவப் பெண்கள்; ஆடும் - ஆடுகின்ற; நாடகம் - நாடகத்தை; தம்தம் - தங்கள் தங்கட்குரிய; சேக்கை - ஆசனத்தில் இருந்து கொண்டு; காண்கின்றாரை - காண்பவராகிய அரக்க மகளிரை. விளக்கு, அரங்கிற்கு இன்றியமையாதது. அதை அறிந்தால் அதைக் காணும் அவைக்குச் சேர்த்து மயங்கார் - இவ் விளக்கை மாண் விளக்கு என்பர் அடிகள் (சிலம்பு 3 - 108) சேக்கை என்பதற்கு ‘நாயகப்பந்தி’ என்று பொருள் கொள்ளின். சேக்கை - ஆடும் நாயகப் பத்தி. திருதம் - தாளவகை. ‘விளம்பிதம்’ என்பது தாளஒத்துக் கேற்ற கட்டுகளாகும். இசை நூற்கூறு - ‘விளம்பின’ என்றபாடம் பொருட்சிறப்பின்று. (106) 4941. | திருத்தியபளிக்கு வேதி தெள்ளியவேல்கள் என்ன கருத்து இயல்புஉரைக்கும் உண்கண்கருங்கயல், செம்மைகாட்ட வருத்தியகொழுநர் தம்பால் வரம்பின்றி வளர்ந்த காம அருத்தியபயிர்க்கு நீர்போல் அருநறவுஅருந்து வாரை |
திருத்திய -நன்றாகஅமைக்கப் பெற்ற; பளிக்கு வேதி - பளிங்குத் திண்ணை; தெள்ளிய வேல்கள் என்ன - கூர்மையான வேல்களைப் போல வருத்த அதை மறக்க; கருத்து இயல்பு - மனத்தின் இயற்கையை; உரைக்கும் - வெளிப்படுத்துகின்ற; உண் - மை பூசப் பெற்ற; கண் கருங்கயல் - கண்ணாகிய கயல் மீன்கள்; செம்மை காட்ட - ஊடற் சீற்றத்தால் ஆகிய, செந்நிறத்தை வெளிப்படுத்தும்படியாக; வருத்திய - (பரத்தையின் தொடர்பால்) |