| | கயிலையில் இருந்த தேவைத் தனித் தனிகடுத்தல் செய்தார். |
வெயில்இயல்குன்றம் - ஒளியமைந்த மகேந்திர மலை; கீண்டு வெடித்தலும் - பிளவுபட்டு இரண்டாதலும்; மயில்இயல் தளிர்க்கை மாதர் -மயில் போன்ற சாயலும், தளிர் போன்ற கைகளும் கொண்ட தெய்வப் பெண்கள்; நடுக்கம் எய்தி தழீஇக் கொள்ள - அச்சமுற்றுத் தழுவிக்கொள்ள (அதனால்); பொலிந்த வானோர் - பூரித்த தேவர்கள்; அயில் எயிற்று அரக்கன் - கூரிய பற்களைப் பெற்ற இராவணன்; அள்ள - பெயர்த்தெடுக்க; திரிந்த நாள் - (கயிலாய மலை) அசைந்த காலத்தில்; அணங்குபுல்ல - உமாதேவி தழுவிக்கொள்ள; கயிலையில் இருந்த தேவை - கயிலாய மலையில்வீற்றிருந்த சிவபிரானை; தனித்தனி கடுத்தல் செய்தார் - ஒவ்வொருவரும்தனித்தனியே ஒத்திருந்தார்கள். தத்தம்தேவிமாரால் தழுவப்பெற்ற தேவர்கள் உமையம்மை தழுவக் கயிலாய மலையில் மகிழ்ந்த சிவபிரானை ஒத்திருந்தனர். வெயில் - ஒளி - வெயில்விரி கனகக் குன்றத்து எழில் கெட - (கம்பன் - மிகை 226) (11) | 4752. | ஊறியநறவும் உற்ற குற்றமும்உணர்வை உண்ண, சீறிய மனத்தர்,தெய்வ மடந்தையர்ஊடல் தீர்வுற்று ஆறினர்,அஞ்சுகின்றார், அன்பரைத்தழுவி உம்பர் ஏறினர், இட்டு,நீத்த பைங்கிளிக்கு இரங்குகின்றார். |
ஊறிய நறவும் -(வியஞ்சனத்துடன்) ஊறிக்கிடந்த மதுவும்; உற்ற குற்றமும் - நேர்ந்த பிழையும்; உணர்வை உண்ண - அறிவை அழிக்க (அதனாலே); சீறிய மனத்தர் - கொதிப்புற்ற மனத்தையுடைய; தெய்வ மடந்தையர் - தேவலோகப் பெண்கள் (மலையின் அதிர்ச்சியால்); ஊடல் தீர்வுற்று ஆறினர் - ஊடல் நீங்கி அமைதியடைந்தனர்; அஞ்சுகின்றார் - அச்சம் அடைந்து; அன்பரைத் தழுவி - கணவரைத் தழுவிக்கொண்டு; உம்பர் ஏறினர் - விண்ணின் கண்ணே சென்று; இட்டு நீத்த - கூண்டுக்குள் |