துன்புறுத்திய; கொழுநர் தம்பால் - கணவர் மாட்டு; வரம்பு இன்றி - எல்லையில்லாமல்; வளர்ந்த காமம் - பெருகிய காமமாகிய; பயிர்க்கு நீர் போல் - பயிரில் பாய்ச்சப்படும் தண்ணீரைப் போலவும்; அருத்திய - (தாம்) விருப்பம் கொண்ட; அருநறவு - சிறந்த மதுவை; அருந்துவாரை - உண்பவராகிய அரக்க மகளிரையும். கருங்கயல் -பிரிவைக் காட்டுகிறது. வருத்துதல் - பரத்தையர்பால் பிரிந்து வருத்துதல். அடிகள், கண்ணகி கருங்கயல், மாதவி செங்கண் என்றார் (இந்திர - 237) கருங்கண் என்றது கண்ணகிக்குப் புணர்ச்சியின்மையால் செங்கண் என்று உரைத்தது மாதவிக்குப் புணர்ச்சி விதும்பலால் என்று அரும்பதவுரை பேசும். கயற்கண் அன்புப் பார்வையைக் காட்டும். வேல்வழி சீற்றத்தைக் காட்டும். (கம்ப.983) இது விப்பிரலம்பம் (பிரிவு) (107) 4942. | கோது அறுகுவளை நாட்டம் கொழுநர்கண் வண்ணம் கொள்ள, தூதுளங் கனியைவென்று துவர்த்தவாய் வெண்மை தோன்ற, மாதரும் மைந்தர்தாமும் ஒருவர்பால்ஒருவர் வைத்த காதல்அம்கள்உண் டார்போல், முறைமுறைகளிக்கின் றாரை- |
கோது அறு -குற்றம்இல்லாத; குவளை நாட்டம் - (அரக்கியரின்) குவளைப் பூப் போன்ற கரிய கண்கள்; கொழுநர் - தம் கணவரின்; கண்வண்ணம் கொள்ள - கண்ணின் (சிவந்த) இயல்பைப் பெறவும்; தூதுளங்கனியை - தூதுளம் பழத்தை; வென்று - (நிறத்தால்) வெற்றி கொண்டு; துவர்த்த வாய் - செந்நிறம் பெற்றவாயில் வெண்மை தோன்ற - வெண்மை நிறம் வெளிப்படவும்; (பூரண இன்பம் பெற்று) மாதரும் - அரக்கப் பெண்களும்; மைந்தர்தாமும் - ஆடவர்களும்; ஒருவர் மேல் ஒருவர் வைத்த - ஒருவர் பால் ஒருவர் கொண்டுள்ள; காதல்அம் கள் - காதலாகிய மதுவை; உண்டார்போல் - உண்டவர்போல்; முறைமுறை - மாறி மாறி; களிக்கின்றாரை - செருக்குக் கொள்பவராகிய காதலர்களையும். கரியகண்கள்சிவத்தலும், சிவந்த வாய் விளர்த்தலும் புணர்ச்சியால் உண்டாகும். களி - உள்ளச் செருக்கு - (திருக்கோவை |