பக்கம் எண் :

142சுந்தர காண்டம்

     புலிஅடும் -புலியைக்கொல்லும்; மதுகை மைந்தர் - வலிமையுடைய
வீரக்கணவர் புரிந்த; புதுப்பிழை - புதிய குற்றமானது; புக்கு - உள்ளத்தே
நுழைந்து; உயிரை நலிவிட - உயிரையே துன்பம் செய்ய; அயில் கண்
நல்லார் -
வேல்போன்ற கண்களையுடைய மகளிர்; அமுத வாயால் -
(முன்பு) அமுதம் வழங்கிய வாயால்; நச்சு உயிர்த்து - (நச்சு) பாம்பைப்
போல மூச்சை வெளிப்படுத்தி; மெலிவு உடை மருங்கில் - மெலிந்துள்ள
இடையானது; மின்னின் அலமர - மின்னலைப் போலத் தடுமாறவும்; சிலம்பு
-
சிலம்பானது; விம்மிஒலிபட - துடித்து ஒலிக்கவும்; உதைக்கும் தோறும் -
உதைக்கும் போதெல்லாம்; மயிர்ப்புளகு உறுகின்றாரை - மயிர் சிலிர்க்கப்
பெறுகின்றவர் களையும்;

     தலைவி உதைப்பதுதலைவனுக்கு இன்பம் தரும். உய்ந்த பிள்ளை
ஊடலைக் காட்டும் குறிப்பாக உதைத்தலை அபிநயித்தார். அப்போது எம்பார்,
‘அவனுக்கு அது தேட்டம், என்றார். வைணவ உரைவளம் (30பக்) காண்க.
                                                      (110)

4945.

உள்ளுடைமயக்கால் உண்கண்
     சிவந்து,வாய்வெண்மை ஊறி,
துள்இடைப் புருவம்கோட்டித்
     துடிப்ப,வேர்பொடிப்ப, தூய
வெள்ளிடை மருங்குலார்தம்
     மதிமுகம்வேறு ஒன்று ஆகிக்,
கள்ளிடைத்தோன்ற நோக்கிக்
     கணவரைக்கவல்கின் றாரை-

     தூய - (மேகம் முதலானவைஇல்லாத) சுத்தமான; வெள்ளிடை -
வெட்ட வெளி போன்ற; மருங்குலார் - இடையை உடைய மகளிர்; தம்
மதிமுகம் -
தம்முடைய சந்திரனை ஒத்த முகம்; வேறு ஒன்றாகி - பிறிதொருவடிவமாகி; கள்ளிடை தோன்ற - கள்ளின் சாடியிலே தெரிய;
நோக்கி -அதைப் பார்த்து (அதனால்); உள் உடை மயக்கால் - மனம்
சிதைந்ததால்உண்டாம் மயக்கத்தால்; உண்கண் சிவந்து - மையுண்ட
கண்கள்சிவக்கப்பெற்று; வாய்வெண்மை ஊறி - வாயில் வெண்ணிறம் பரவி;
துள் -துள்ளுகின்ற; புருவம் - புருவம்; இடை - நடுவில்; கோட்டி துடிப்ப
-
வளைந்து துடிக்க; வேர் பொடிப்ப - வியர்வை அரும்பித் தோன்ற;