பக்கம் எண் :

ஊர் தேடு படலம்145

- கண்களையுடையவராய்;தூதியர் முறுவல் நோக்கி - தூதாகச் சென்ற
பெண்களின் புன்னகையைப் பார்த்து; உயிர் வந்து - சென்ற உயிர் மீளவும்
வரப் பெற்று; துடிக்கின்றாரை - துடிக்கின்றவர்களையும்;

    ஏதி - ஆயுதம்,அமளி - படுக்கை; சேக்கை - இடம்.         (114)

4949.

சங்கொடுசிலம்பும், நூலும்
     பாதசாலகமும் தாழ,
பொங்குபல்முரசம் ஆர்ப்ப
     இல்உறைதெய்வம் போற்றி,
கொங்குஅலர்கூந்தல், செவ்வாய்,
     அரம்பையர், பாணி கொட்டி
மங்கல கீதம்பாட
     மலர்ப்பலிவகுக்கின்றாரை-

     சங்கொடுசிலம்பும் - சங்கு வளையல்களும்காற்சிலம்பும்; நூலும் -
அரை நூல் மாலையும் (மேகலை); பாத சாலகமும் - பாதத்தில் அணியும்
கொலுசும்; தாழ - ஒலி குன்றும்படியாக; பொங்கு - மிக்கு ஒலிக்கின்ற;
பல்முரசம் ஆர்ப்ப - பலவகை முரசங்கள் ஒலிக்கவும்; கொங்கு அலர்
கூந்தல் -
மணத்தைப் பரப்பும் கூந்தலையும்; செவ்வாய் - சிவந்த வாயையும்
(உடைய); அரம்பையர் - தேவமாதர்கள்; பாணி கொட்டி - தாளத்தை ஒற்றி;
மங்கல கீதம் பாட - மங்கலப் பாடல்களைப் பாடவும்; இல்லுறை தெய்வம்
போற்றி -
வீட்டுத் தேவதைகளைப் புகழ்ந்து; மலர்ப்பலி - அருச்சனைப்
பூக்களை; வகுக்கின்றாரை - தூவுகின்ற இல்லுறை மகளிர்களையும்;

     இல்லுறை தெய்வம்- வீட்டுத் தேவதை. இலக்கணையார் இலம்பகத்தில்
இனியர் 17 ஆம் பாடலில் இல்லுறை தெய்வத்திற்குப் பூப்பலியைச் சிந்தினார்
என்று வரைந்தார். ‘பூப்பலி செய்து’ (சிலம்பு - 28 - 231) பூப்பலி -
அருச்சனை (குறிப்புரை) நூல் - அரைநூல்மரவை (மேகலை)        (115)

4950.

இழைதொடர் வில்லும் வாளும்
     இருளொடு மலைய, யாணர்க்
குழைதொடர்நயனம் கூர்வேல்
     குமரர்நெஞ்சு உருவக் கோட்டி,