பக்கம் எண் :

146சுந்தர காண்டம்

 

முழைதொடர் சங்கு பேரி
     முகில்என முழங்க, மூரி
மழைதொடர் மஞ்ஞை என்ன
     விழாவொடு வருகின்றாரை-

     இழை தொடர் -ஆபரணங்களிலிருந்து புறப்படும்; வில்லும் -
(விட்டுவிட்டு வரும்) ஒளியும்; வாளும் - இடையீடின்றி வரும் ஒளியும்;
இருளொடு மலைய - இருளுடன் போர் செய்யுவும்; குழை தொடர் -
காதணிகளை அளாவும்; நயனம் - கண்களாகிய; யாணர் - புதுமையான;
கூர்வேல் - கூர்மையான வேலை; கோட்டி - செலுத்தி (அதனால்); குமரர்
நெஞ்சு -
இளைஞர்களின் நெஞ்சங்களை; உருவ - துளைக்கவும்; தொடர் -
அடுக்கடுக்கான; முழைசங்கு - துளை பெற்ற சங்குகளும்; பேரி -
முரசங்களும்; முகில் என - மேகம் போல; முழங்க - ஆரவாரிக்கவும்; மூரி
மழை தொடர் -
வலிய மேகத்தின் பால் அன்பு கொண்ட; மஞ்ஞை என்ன
-
மயில்களைப் போல; விழாவொடு வருகின்றாரை - விழாக் கோலத்துடன்
வரும் பெண்டிரையும்;

     மலைய, உருவ,முழங்க, வருகின்றாரை எனக்கூட்டுக - அன்றி -
மலைய, முழங்க, வேல் உருவக் கோட்டி வருகின்றாரை என்றும் பொருள்
கொள்ளலாம். வில் - விட்டுவிட்டுப் பிரகாசிப்பது வாள் - தொடர்ந்து
பிரகாசிப்பது. வில்லும் வாளும் இருளொடு போர் செய்கிறது (சிலேடை)
பெண்மையைச் சிறப்பிக்கும் சங்க நூல்கள் ‘விழவு மேம்பட்ட நலன்’ (குறுந்
125) குறுமகள் வந்தென விழவாயிற்று (குறுந் 294) என்று பேசும்.
      (116)

4951..

பள்ளியில், மைந்த ரோடும்
     ஊடிய பண்புநீங்கி,
ஒள்ளிய கலவிப்பூசல்
     உடற்றுதற்குஉருத்த நெஞ்சர்,
மெள்ளவே இமையைநீக்கி,
     அஞ்சன இழுதுவேய்ந்த,
கள்ளவாள்நெடுங்கண் என்னும்
     வாளுறைகழிக்கின்றாரை-

     பள்ளியில் -படுக்கையில்; மைந்தரோடும் - தம்முடைய கணவருடன்;
ஊடிய பண்பு நீங்கி - பிணங்கிய இயல்பை விடுத்து; ஒள்ளிய - சிறந்த;
கலவிப் பூசல் உடற்றுதற்கு - புணர்ச்சிப் போர்