| முழைதொடர் சங்கு பேரி முகில்என முழங்க, மூரி மழைதொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை- |
இழை தொடர் -ஆபரணங்களிலிருந்து புறப்படும்; வில்லும் - (விட்டுவிட்டு வரும்) ஒளியும்; வாளும் - இடையீடின்றி வரும் ஒளியும்; இருளொடு மலைய - இருளுடன் போர் செய்யுவும்; குழை தொடர் - காதணிகளை அளாவும்; நயனம் - கண்களாகிய; யாணர் - புதுமையான; கூர்வேல் - கூர்மையான வேலை; கோட்டி - செலுத்தி (அதனால்); குமரர் நெஞ்சு - இளைஞர்களின் நெஞ்சங்களை; உருவ - துளைக்கவும்; தொடர் - அடுக்கடுக்கான; முழைசங்கு - துளை பெற்ற சங்குகளும்; பேரி - முரசங்களும்; முகில் என - மேகம் போல; முழங்க - ஆரவாரிக்கவும்; மூரி மழை தொடர் - வலிய மேகத்தின் பால் அன்பு கொண்ட; மஞ்ஞை என்ன -மயில்களைப் போல; விழாவொடு வருகின்றாரை - விழாக் கோலத்துடன் வரும் பெண்டிரையும்; மலைய, உருவ,முழங்க, வருகின்றாரை எனக்கூட்டுக - அன்றி - மலைய, முழங்க, வேல் உருவக் கோட்டி வருகின்றாரை என்றும் பொருள் கொள்ளலாம். வில் - விட்டுவிட்டுப் பிரகாசிப்பது வாள் - தொடர்ந்து பிரகாசிப்பது. வில்லும் வாளும் இருளொடு போர் செய்கிறது (சிலேடை) பெண்மையைச் சிறப்பிக்கும் சங்க நூல்கள் ‘விழவு மேம்பட்ட நலன்’ (குறுந் 125) குறுமகள் வந்தென விழவாயிற்று (குறுந் 294) என்று பேசும். (116) 4951.. | பள்ளியில், மைந்த ரோடும் ஊடிய பண்புநீங்கி, ஒள்ளிய கலவிப்பூசல் உடற்றுதற்குஉருத்த நெஞ்சர், மெள்ளவே இமையைநீக்கி, அஞ்சன இழுதுவேய்ந்த, கள்ளவாள்நெடுங்கண் என்னும் வாளுறைகழிக்கின்றாரை- |
பள்ளியில் -படுக்கையில்; மைந்தரோடும் - தம்முடைய கணவருடன்; ஊடிய பண்பு நீங்கி - பிணங்கிய இயல்பை விடுத்து; ஒள்ளிய - சிறந்த; கலவிப் பூசல் உடற்றுதற்கு - புணர்ச்சிப் போர் |