பக்கம் எண் :

148சுந்தர காண்டம்

     கரணம்-மனம்,புத்தி சித்தம், அகங்காரம். உணர்வு-அறிவு உள்ளம்-
ஊக்கம். தலைவிக்கு உதவியாக இருந்தது பெருமூச்சே., உள்ளம் மேவிய
கரணம் என்பதை ஒரு தொடராக்கி அந்தக் கரணம் என்று உரை கூறுவர்,
சிலர். உள்ளம் - மனம் என்பர் சிலர். ஆவி-உயிர் என்று கூறப்பெற்றது.
ஆவி-பெருமூச்சு. ‘உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே’ (கம்ப. 1092.) ஐ
உருபு மாதருடன் கூட்டப் பெற்றது - அடைக்கின்ற மாதரை என அமைக்க.
                                                          (118)

4953.

கின்னரமிதுனம் பாடக்,
     கிளர்மழைகிழித்துத் தோன்றும்
மின் எனத்தரளம் வேய்ந்த                     
     வெண்நிறவிமானம் ஊர்ந்து,
பன்னக மகளிர்சுற்றிப்
     பலாண்டுஇசை பரவ, பண்ணைப்
பொன்நகர்வீதிதோறும்;
     புதுமனைபுகுகின் றாரை-

     கிளர் - மேல்நோக்கி எழுகின்ற; மழை - மேகத்தை; கிழித்துத்
தோன்றும் -
பிளந்து கொண்டு வெளிப்படுகின்ற; மின் என - மின்னலைப்
போல; தரளம் வேய்ந்த - முத்துக்களால் போர்ததப் பெற்ற; வெண்நிற -
வெண்மையான நிறத்தைப் பெற்ற; விமானம் ஊர்ந்து - விமானத்தைச்
செலுத்தி; (தமக்குரிய இடத்தைச் சார்ந்து) (அங்கே) கின்னர மிதுனம் பாட -
கின்னரப் பறவைகள் பாடவும்; பன்னக மகளிர் - நாகலோகப் பெண்கள்;
சுற்றி - சூழ இருந்து கொண்டு; இசை - பண்ணுடன்; பலாண்டு பரவ -
பல்லாண்டுகளால் வாழ்த்தவும்; பண்ணை - நீர்நிலைகளைப் பெற்ற;
பொன்நகர் வீதிதோறும் - புதிய நகரத்தில் அமைந்த வீதிதோறும்;
புதுமனைபுகுகின்றாரை - புதிதாகக் கட்டப்பெற்ற வீடுகளில் புகுபவரையும்;

     ‘பொன்’ என்றசொல் புதுமையைக் காட்டும். பொன்ஏர் - என்பது
முதலில் உழுதலைக் குறிப்பதை அறிக. பண்ணை - நீர்நிலை. தக்கை
இராமாயணம் ‘இல்லறவீதியும் புதுமனையும் கட்டிக் குடியேறும் பலரைக்
கண்டான்’ என்று பேசும் (சௌந்தரிய - ஊர் தேடு - 8) நகரும் புதிது வீடும்
புதிது. கின்னர மிதுனம் - இசைபாடும் பறவை. கின்னரம் முரலும்
அணங்குடைச்சாரல் (பெரும்பாண் 494) பெரியாழ்வார், கின்னரம்
மிதுனங்களும் கின்னரம் தொடுகிலோம் என்றனர். (பெரியாழ்வார் திருமொழி 3
- 6) என்று பாடுகிறார். மணவாள மாமுனிகள், கொண்டு பாடித்திரிகையாலே
கிந்நரமிதுனங்கள் என்று