பக்கம் எண் :

ஊர் தேடு படலம்149

ஜகத்பிரஸித்தங்களாய் இருக்கின்றவர்கள் என்று விளக்கம் தந்தார்.
ஆழ்வாரின் திருவுள்ளம். கின்னரமிதுனம் தேவர்கள் என்று கருதுகின்றது.
கம்பர் பாடுகின்ற கின்னர மிதுனங்கள் என்பார். ஏற்பன கொள்க.(119)

4954.

கோவையும்குழையும் மின்ன,
    கொண்டலின் முரசம் ஆர்ப்ப,
தேவர்நின்று ஆசிகூற,
     முனிவர்சோபனங்கள் செப்ப,
பாவையர்குழாங்கள் சூழ,
     பாட்டொடுவான நாட்டுப்
பூவையர் பலாண்டுகூற,
     புதுமணம்புகுகின்றாரை-

     கொண்டலின் -மேகத்தைப்போல; முரசம் ஆர்ப்ப - முரசங்கள்
முழங்கவும்; நின்று - நின்றுகொண்டு; தேவர் ஆசிகூற - தேவர்கள் ஆசிகள்
கூறவும்; முனிவர் - முனிவர்கள்; சோபனங்கள் செப்ப - மங்கல
வாழ்த்துக்கள் பாடவும்; பாவையர் குழாங்கள் - பெண்கள் கூட்டங்கள்;
பாட்டொடு - பாட்டுக்களோடு; சூழ - சுற்றியிருக்கவும்; வானநாட்டுப்
பூவையர் -
தேவலோகப் பெண்கள்; பலாண்டு கூறு - பல்லாண்டுகள் பாட;
கோவையும் - முத்துக்களாலும் மணிகளாலும் அமைந்த மாலைகள்; குழைகள்
மின்ன -
மகரக் குழைகள் ஒளி வீசவும்; புதுமணம் புணர்கின்றாரை -
புதுமணம் புரிகின்றவர்களையும்.                             (120)

                         அனுமன்கும்பகருணனைக் காணுதல்

4955.

இயக்கியர், அரக்கி மார்கள்,
     நாகியர்,எஞ்சுஇல் விஞ்சை
முயல்கறைஇல்லாத் திங்கள்
    முகத்தியர், முதலி னோரை-
மயக்குஅற நாடிஏகும்
     மாருதி, மலையின் வைகும்
கயக்கம்இல்துயிற்சிக் கும்ப
     கருணனைக் கண்ணின் கண்டான்.

     இயக்கியர் -யட்சப்பெண்கள்; அரக்கிமார்கள் - அரக்கப்
பெண்கள்;நாகியர் - நாகலோகப் பெண்கள்; எஞ்சு இல் -