பக்கம் எண் :

150சுந்தர காண்டம்

குறைவற்ற; முயல்கறை- முயலாகிய களங்கம்; இல்லாத் திங்கள் - இல்லாத
சந்திரனைப் போன்ற; முகத்தியர் - முகத்தையுடைய; விஞ்சை -
வித்தியாதரப்பெண்கள்; முதலினோரை - முதலான பெண்களை; மயக்கு
அற -
சந்தேகம்இல்லாதபடி; நாடி ஏகும் மாருதி - ஆராய்ந்து செல்லும்
ஆஞ்சநேயன்;மலையின் வைகும் - மலைபோல் உள்ளவனும்; கயக்கம் இல்
துயிற்சி -
இடையீடில்லாத உறக்கத்தை உடையவனும் ஆகிய;
கும்பகருணனை -கும்பகர்ணனை; கண்ணின் கண்டான் - கண்களால்
பார்த்தான்.

     இயக்கியர்முதலானோரை நாடிச்செல்லும் மாருதி கும்பகர்ணனைப்
பார்த்தான்.

     முகத்தியர்,என்னும் குறிப்பு வினைமுற்று பெயரெச்சப்பொருளில் வந்தது.
வினை எஞ்சு கிளவியும் வேறு பல்குறிய (தொல்-சொல் 457-சேனா) விஞ்சை
என்பது ஆகுபெயராய் விஞ்சையரைக் குறித்தது. ‘வித்தைகள் வித்தை ஈசர்’
என்னும் சித்தியாரில் வித்தை என்பது மந்திரேசுரரைக் குறித்தமை காண்க
(சித்தி. சுபக்கம் 1-25) கயக்கம் - இடையீடு. 104 முதல் 121 வரை ஒரு தொடர்.
                                                          (121)

  கலிவிருத்தம்

4956.

ஓசனைஏழ்அகன்று உயர்ந்தது; உம்பரின்
வாசவன் மணிமுடிகவித்த மண்டபம்
ஏசுற விளங்கியது;இருளை எண்வகை
ஆசையின்நிலைகெட அலைக்கல் ஆன்றது.

(கும்பன் அரண்மனை)

     ஏழ் ஓசனை -ஏழு யோசனை தூரம்; அகன்று உயர்ந்தது - விரிவு
பெற்று அதற்கேற்ப உயர்ந்தது; உம்பரின் - விண்ணுலகத்தில்; வாசவன் -
இந்திரன்; மணி முடி கவித்த மண்டபம் - அழகிய முடியைத் தரித்துக்
கொண்ட மண்டபமானது; ஏசுற - பழியடையும்படி; விளங்கியது - (அதனினும்
சிறப்பாக) ஒளி வீசுவது; எண்வகை ஆசையின் - எட்டுத் திக்கின் கண்ணும்
உள்ள; இருள் - இருளானது நிலைகெட - நிலைகெட்டு அழிய; அலைக்கல்
ஆன்றது -
ஓடச்செய்தலால் (மன) நிறைவு பெறுவது.

     இந்திரன் மணிமுடிசூடும் மண்டபம் இந்திரனின் மணிமுடியைச் சூடிய
மண்டபம் என்றும் இந்திரனின் மணி முடியைப் பறித்துக் கொண்டு வந்து
கும்பகர்ணன் அதை