வகையான நடையைமேற்கொண்டு; வந்து - கும்பகர்ணனின் பக்கம் வந்து; இழுகி ஏக - வருடிச் செல்லவும். முன்னிய -கிளர்ந்தெழுந்த. நளிகடல் முன்னியது போலவும் (பரிபாட்டு 12-7) பணி செய்வோர் நீராடித் தூய்மையுடன் வந்து தொண்டு புரிவர். அதனையே தென்றல் மேற்கொண்டது. மூவகை இயல், மந்த நடை, மத்திய நடை, துரித நடை (அடை பதி) குளிர்ச்சி, மந்தம், பரிமணம் ஆக கதி மூன்றினையும் என்பது பழைய உரை. (அடை - பதி) காளிதாசரும் இம் மூன்று பண்பையே போற்றுவார். கங்கை நீர் தோய்ந்ததால் குளிர்ச்சியும், தேவதாரு மரங்களின் சார்பால் மணமும், மயில்தோகையை அலைத்ததால் மென்மையும் பெற்ற காற்று வேடர்களின் நலிவைப் போக்கிற்று என்பர் (குமார 1-15) (124) 4959. | வானவர்மகளிர் கால்வருட, மாமதி ஆனனம் கண்டமண்டபத்துள், ஆய்கதிர்க் கால்நகு காந்தம்மீக்கான்ற காமர்நீர்த் தூநிற நறுந்துளிமுகத்தில் தோற்றவே. |
வானவர் மகளிர்- தேவமகளிர்; கால் வருட - கால்களைப் பிடித்து விடவும்; மாமதி - நிறைந்த பூரண சந்திரனானவன்; ஆனனம் கண்ட - தன் முகத்தைப் பார்த்துக் கொள்ளும்; மண்டபத்துள் - மண்டபத்தின்கண்; ஆய்கதிர் - மென்மையான ஒளி; நகு - விளக்கம் பெற்ற; காந்தக் கால் - காந்தத்தால் அமைத்த தூண்; மீ கான்ற - மேலே வெளிப்படுத்திய; காமர் - இனிமை யானதும்; தூ - தூய்மையானதும்; நிறம் - சிறப்பு மிக்கதும் (ஆன); நறும் நீர்த்துளி - நறுமணம் மிக்க நீர்த்துளி; முகத்தில் - முகத்திலே; தூற்ற - மெல்ல வீசப் பெறவும். சந்திரன் தன்முகஅழகைப் பார்க்கும் மண்டபம். சந்திரன் பார்வை பட்டதால் காந்தத் தூண்கள் நறுந்துளி தூற்றின. (125) 4960. | மூசியஉயிர்ப்பு எனும் முடுகு வாதமும், வாசலின்புறத்திடை நிறுவி, வன்மையால் நாசியின்அளவையின் நடத்த, கண்டவன் கூசினன்;குதித்தனன், விதிர்த்த கையினான். |
மூசிய - ஒன்றன் பின்ஒன்றாய் மொய்த்து வருகின்ற; உயிர்ப்பு எனும் - மூச்சுக்காற்று எனப்படும்; முடுகு வாதமும் - வேகமான காற்றும்; வாசலின் புறத்திடை நிறுவி - (அனுமனைக் |