4962. | பகைஎன, மதியினைப் பகுத்து, பாடுஉற அகைஇல்பேழ்வாய் மடுத்து, அருந்துவான்எனப், புகையொடுமுழங்குபேர் உயிர்ப்புப் பொங்கிய நகைஇலா முழுமுகத்துஎயிறு நாறவே. |
பகைஎன - பகை என்று கருதி;மதியினை - பூரண சந்திரனை; பகுத்து - இரண்டு கூறு படுத்தி; அகைஇல் - வருத்தம் இல்லாத; பேழ்வாய் - பெரியவாயின்; பாடு - இரண்டு பக்கத்திலும்; உற மடுத்து - நன்றாக உட்கொண்டு; அருந்துவான் என - உண்பவனைப் போல; புகையொடு - புகையும்; முழங்குபேர் உயிர்ப்பு - முழங்குகின்ற பெருமூச்சு; பொங்கிய - மிக்கிருக்கின்ற; நகை இலா - புன்னகையில்லாத; முழுமுகத்து - பெரியமுகத்திலே; எயிறு நாற - பற்கள் தோன்றவும். சந்திரனை இரண்டுகூறுபடுத்தி உண்பவனைப் போல இரண்டு பக்கங்களிலும் வெண்மையான பற்கள் தோன்றவும். புகையும், உயிர்ப்பும் உள்ள முகம் நாற - வெளிப்பட்டுத்தெரிய அகையில் - வருத்தம் இல்லாத. உணவு இல்லாமையால் வருத்த மடையாத வாய். அகை - வருத்தம். அகையேல் அமர் கோழி (சிந்த 1524) (128) 4963. | தடைபுகு மந்திரம் தகைந்த நாகம்போல், இடைபுகல் அரியதுஓர் உறக்கம் எய்தினான், கடையுக முடிவு எனும்காலம் பார்த்து அயல் புடைபெயராநெடுங் கடலும் போலவே. |
யுகம் முடிவு எனும்- யுகங்களின் முடிவு என்று கூறப்படும்; கடை காலம் ஓர்ந்து - பிரளய காலத்தை எதிர்பார்த்து; அயல் புடை பெயரா - கரையைவிட்டுச் செல்லாத; நெடும் - பெரிய; கடல் போல - சமுத்திரத்தைப் போலவும்; தடைபுகு மந்திரம் - தடையைச் செய்யும் மந்திரத்தால்; தகைந்த - கட்டுப்பட்ட; நாகம் போல் - நல்ல பாம்பைப் போலவும்; இடை - இடையூறு; புகல் அரியது - புகவியலாத; உறக்கம் எய்தினான் - உறக்கத்தைஅடைந்தான். (129) அனுமன் கும்பகர்ணனைஇராவணனோ என ஐயுற்றுத் தெளிதல் கலிநிலைத்துறை 4964. | ஆவ தாகியதன்மைய அரக்கனை, அரக்கர் கோ எனாநின்றகுணமிலி இவன்எனக் கொண்டான் |
|