பக்கம் எண் :

ஊர் தேடு படலம்157

4967.

மாட கூடங்கள், மாளிகை ஓளிகை, மகளிர்
ஆடு அரங்குகள்,அம்பலம், தேவர் ஆலயங்கள்,
பாடல் வேதிகை,பட்டி மண்டபம் முதல் பலவும்
நாடி ஏகினன்இராகவன் புகழ்எனும் நலத்தான்.

    இராகவன் புகழ்எனும் நலத்தான் - இராமபிரானின்கீர்த்தியின்
வடிவமான அனுமன்; மாட கூடங்கள் - மாடகூடங்களையும்; மாளிகை
ஒளிகை -
மாளிகை வரிசைகளையும்; மகளிர் ஆடு அரங்குகள் - பெண்கள்
விளையாடும் மேடைகளையும்; அம்பலம் - சபைகளையும்; தேவர்
ஆலயங்கள் -
கடவுளர் கோவில்களையும்; பாடல் வேதிகை -
இசையரங்குகளையும்; பட்டி மண்டபம் - விவாத மேடைகளையும்; முதல் -
இவை முதலான; பலவும் - பலவற்றையும்; நாடி - (பிராட்டியைத்) தேடி;
ஏகினன் -
சென்றான்.

     இராமபிரானின்புகழின் வடிவமான அனுமன், மாடகூடங்கள்
முதலானவற்றைத் தேடிச் சென்றான்.

     இராமபிரானின்புகழையே எப்போதும் அனுமன் சிந்தித்தபடி இருத்தலின்
அவனை இராமபிரானின் புகழாகவே கவிஞன் இசைத்தான். ஒளிகை - வரிசை.
அம்பலம் - பலர்கூடு்ம் இடம். வேதிகை -மேடை.                 (133)

4968.

மணிகொள்வாயிலில், சாளரத் தலங்களில், மலரில்
கணிகொள்நாளத்தில், கால்என, புகைஎனக் கலக்கும்
நுணுகும், வீங்கும்; மற்றுஅவன்நிலை யாவரே
                                  நுவல்வார் ?
அணுவில்,மேருவில் ஆழியான் எனச்செலும்; அனுமன்

     ஆழியான் என -சக்கரப்படை ஏந்திய திருமாலைப் போல;
அணுவின்-
சிறிய அணுவின் கண்ணும்; மேருவின் - பெரிய மேருமலையின்
 கண்ணும்;செலும் அனுமன் - ஊடுருவிச் செல்ல வல்ல அனுமன்;
மணிகொள்வாயிலில் -
மணிகள் பதிக்கப்பெற்ற வாசல்களிலும்; சாளரத்
தலங்களில் -
பலகணி இடங்களிலும்; மலரில் - பூவின் கண்ணும்;
கணிகொள் நாளத்தி்ல் -
நுட்பமான பூக்களின் தண்டின் கண்ணும்; கால்என
-
காற்றைப் போலவும்;புகை என் - புகையைப் போலவும்; கலக்கும் -
ஒன்று படுவான்;