4970. | பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன் துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத் தோர்பால் வெளித்து வைகுதல்அரிதுஎன அவர்உரு மேவி, ஒளித்துவாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான். |
(அனுமன்) கருநிறத்தோர்பால் - கரிய நிறமுடையஅரக்கர்களின் நடுவில்; வெளித்து - வெண்ணிறங் கொண்டு (வெளிப்படையாக); வைகுதல் அரிது என - வாழ்வது கடினம் என்று கருதி; அவர் உரு மேவி - அவ்வரக்கர்களின் கரிய வடிவத்தை அடைந்து; பவளத்தின் கூடத்து - பவளத்தாற் செய்யப்பட்ட கூடத்திலே; பசுந்தேன் துளிக்கும் - பசுமையான தேன் சிதறுகின்ற; கற்பகப் பந்தரில் - கற்பகப் பந்தலின் அடியில்; பளிக்கு வேதிகை - பளிங்காலமைந்த மேடையில்; ஒளித்து - மறைத்து; வாழ்கின்ற - வாழும்படியான; தருமம் அன்னான்தனை - தருமம் போன்ற வீடணனை; உற்றான் - அணுகிப் பார்த்தான். அறத்தின் நிறம்வெண்மை என்பது இலக்கிய வழக்கு. இராமபிரானின் பல்லின் வெண்மையைப் பேசவந்த அனுமன், ‘துறையறத்தின் வித்து முளைத்த அங்குரல் கொல்’ என்று பேசினான் (கம்ப. 5280) “ ஆரருள சுரக்கும் நீதி அறம் நிறம்கரிதோ” (கம்ப. 6492) எனப்பின் வருவதும் இங்கு கருதுக. (135) 4971. | உற்றுநின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான் ‘குற்றம்இல்லதோர் குணத்தினன் இவன்’ எனக் கொண்டான் செற்றம்நீங்கிய மனத்தினன், ஒருசிறைச் சென்றான் பொற்றைமாடங்கள் கோடிஓர் நொடியிடைப் புக்கான். |
உற்றுநின்று -(வீடணனை)அணுகியிருந்து; அவன் உணர்வை - அந்த வீடணனின் உணர்ச்சியை; தன் உணர்வினால் - தன்னுடைய ஆய்வுணர்வால்; உணர்ந்தான் - அறிந்து கொண்டு; இவன் - இங்கே உறங்கும் இவன்; குற்றம் இல்லது - குற்றங்கள் இல்லாத; ஓர் குணத்தினன் - ஒப்பற்ற குணமுடையவன்; எனக் கொண்டான் - என்று தெரிந்து கொண்டு (அதனால்); செற்றம் நீங்கிய - பகைமை விலகிய; மனத்தினன் - உள்ளத்தைஉடைய |