பக்கம் எண் :

162சுந்தர காண்டம்

கரங்களிலும்; சில- சில முகங்களையும் சில கரங்களையும்; கரந்தனையான்
-
ஒளித்துக் கொண்டாற் போன்று தோன்றுபவனும்; ஒக்க நோக்கியர் -
ஒரேபடித்தான அழகுடைய மகளிர்களின்; குழாத்திடை - கூட்டத்தின்
நடுவில்; உறங்கு கின்றானை -  உறங்குபவனும் ஆகிய இந்திரஜித்தனை;
புக்கு -
அவன் அரண்மனைக்குள் புகுந்து; நோக்கினன் - பார்த்தான்.

     ஒக்கநோக்கியர் - அவயவம் முழுதும் அழகிய பெண்கள் என்பது
பழையவுரை  (அடை -பதி)                                    (140)

4975.

வளையும்வாள்எயிற்று அரக்கனோ? கணிச்சியான்
                                     மகனோ?
அளையில்வாள்அரி அனையவன்-யாவனோ ?
                                    அறியேன்;
இளைய வீரனும்ஏந்தலும், இருவரும், பலநாள்
உளைய உள்ளபோர் இவனொடும் உளது என
                                  உணர்ந்தான்.

     அளையில் வாள்அரி அனையவன் - குகையில் உறங்கும்
கொடுஞ்சிங்கம் போன்ற இவ்வீரன்; வளையும் வாள் எயிறு - வளைந்த
ஒளியுள்ள பற்களையுடைய ; அரக்கனோ? - அரக்கர் குலத்தவனோ
(அன்றேல்); கணிச்சியான் - மழுப்படை ஏந்திய சிவபிரானின்; மகனோ? -
புதல்வனாகிய முருகப் பெருமானோ? யாவனோ - எவனோ (யாரென);
அறியேன் - அறியாமல் உள்ளேன் (ஆனால்); இளைய வீரனும் - இளமைப்
பருவமுடைய இலக்குவனும்; ஏந்தலும் - சரண் புக்காரைக் காக்கும்
இராமபிரானும் (ஆகிய); இருவரும் - இரண்டு மகா வீரர்களும்; உளைய -
மன உளைச்சல் அடையும்படி; உள்ள போர் - இனி நிகழக்கூடிய யுத்தம்;
பல நாள் -
பல நாள்கள்; இவனொடும் - இந்த வீரனுடன்; உளது - நிகழப்
போகிறது; என - என்ற உண்மையை; உணர்ந்தான் - அறிந்தான்.

     கணிச்சி - மழு.கணிச்சி மணிமிடற்றோன் (புறம் 56) அளை - குகை.
இவனை யார் என அறியேன். ஆனால் இவன் போர் வல்லான் என்பதை
அறிகிறேன், என்ற அனுமனின் தீர்க்கதரிசனம் கூர்மையானது. ஏந்தல் -
சரணாகதி அடைந்தவரை ஏந்துபவன். காரணப்பெயர்.             (141)