பக்கம் எண் :

ஊர் தேடு படலம்217

     என்று - என்று கருதி; ஊக்கி - ஊக்கம் பெற்று; எயிறு கடித்து -
தன்னுடைய பற்களைக் கடித்து; இருகரமும் பிசைந்து - இரண்டு கைகளையும்
பிசைந்து; எழுந்து நின்று - எழுந்து சென்று நின்று; ஊக்கி - (பிறகு) சினம்
நெகிழ்ந்து; உணர்ந்து - ஆராய்ந்து; உரைப்பான் - (தனக்குள்)
(பின்வருமாறு) கூறுபவனானான். (இராவணனையும் இலங்கையையும் அழித்தல்)
நேமியோன் - இராமபிரானின்; பணி அன்று - கட்டளை அன்று (அன்
றியும்);ஒன்று ஊக்கி - ஒரு செயலைச் செய்யத் தொடங்கி; ஒன்று
இழைத்தல் -
வேறு செயலைச் செய்தல்; உணர்வு உடைமைக்கு -
அறிவாகியசெல்வத்துக்கு; உரித்து அன்று - உரிமையான செயலன்று; பின் -
பிறகு;தூக்கின்  - ஆராய்ந்தால்; இது - யான் எண்ணிய இச்செயல்; சால -
மிகுதியாக; பிழை பயக்கும் - துன்பத்தை உண்டுபண்ணும்; என - என்று
நினைத்து; பெயர்ந்தான் - பின் வாங்கினான்.

     பின்வாங்குதல்,செயல் செய்யாமல் ஒதுங்குதல். ஊக்கி உணர்ந்து,
என்பதில் உள்ள ஊக்கி என்பது நெகிழ்ந்து என்னும் பொருள் தந்தது.
முயங்கிய கைகளை ஊக்க என்னும் பகுதிக்கு (குறள் 1238) அழகர் தழுவிய
கைகளைத் தளர்த்தினேன் ஆக என்று உரை வரைந்தார் ஒன்று ஊக்கி, ஒன்று
இழைத்து என்பதில் உள்ள ஊக்கி என்பது செய்யத் தொடங்கி என்னும்
பொருள் தந்தது.                                             (221)

5056.

ஆலம்பார்த்து உண்டவன்போல்
     ஆற்றல்அமைந்துளர் எனினும்
சீலம் பார்க்கஉரியோர்கள்
     எண்ணாதுசெய்பவோ ?-
மூலம்பார்க்குறின் உலகை
    முற்றுவிக்கும் முறைதெரினும்
காலம் பார்த்து,இறைவேலை
     கடவாதகடல் ஒத்தான்.

(அனுமன்)

     உலகை - உலகங்களை; முற்றுவிக்கும் - அழிக்கின்ற; முறைதெரினும்
-
இயல்பை உடையது என்றாலும்; காலம் பார்த்து - காலத்தின் (ஆணையை)
எதிர்பார்த்து; இறை - சிறிதுகூட; வேலை கடவாத - கரையை மீறிப்போகாத;
கடல் ஒத்தான் - கடலைப்போல இருந்தான்; மூலம் - (அவ்வாறு
அடங்கியதற்கு) காரணத்தை; பார்க்குறின் - ஆராய்ந்தால்; பார்த்து -
தேவர்களின்