| நின்று எண்ணிஉன்னுவான் அந்தோ !இந் நெடு நகரில் பொன் துன்னும்மணிப் பூணாள் இலள்என்ன, பொருமுவான். |
என்று எண்ணி -என்றுகருதி; இனி - இனிமேல்; ஈண்டு - இங்கே (இருப்பதால்); ஓர் பயன் இல்லை - ஒரு பிரயோசனம் இல்லை; என - என்று; நினையா - எண்ணி; குன்று அன்ன - மலை போன்ற; தோளவன்தன் - தோளையுடைய இராவணனின்; கோமனை - அரண்மனை; பிற்பட - பின்னே நிற்க; பெயர்ந்தான் - வெளியே சென்ற அனுமன்; அந்தோ - ஐயோ; இ நெடுநகரில் - இந்தப் பெரிய நகரத்தில்; பொன் துன்றும் - பொன்னிலே பதித்த; மணிப்பூணாள் - மணிகளையுடைய ஆபரணம் அணிந்த பிராட்டி; இலள்என்ன - இல்லை என்று; நின்று - திகைத்து; எண்ணி - ஆலோசித்து; உன்னுவான் - நினைத்து; பொருமுவான் - குமுறுபவன் ஆனான். எண்ணுதல்,ஆலோசித்தல், உன்னுதல், நினைத்தல். (225) 5060. | கொன்றானோ ? கற்பழியாக் குலமகளை ?கொடு்ந்தொழிலால் தின்றானோ ?எப்புறத்தே செறித்தானோ சிறை ? சிறியேன் ஒன்றானும்உணரகிலேன்; மீண்டுஇனிப்போய் என்னுரைக்கேன் பொன்றாதபொழுது, எனக்கு இக் கொடுந்துயரம் போகாதால். |
(இராவணன்) கற்பு அழியா- கற்பு நிலையிலிருந்து பிறழாத; குலமகளை - தூய பிராட்டியை; கொன்றானோ - கொன்றுவிட்டானோ; கொடுந்தொழிலால் - (புலால் உண்ணும்) கொடிய செயலால்; தின்றானோ - தின்று விட்டானோ; எப்புறத்தே - எந்த உலகத்தில்; செறித்தானோ - சிறையில் அடைத்து வைத்தானோ; சிறியேன் - அற்ப அறிவுடைய யான்; ஒன்றானும் - ஒரு சிறிதும்; உணரகிலேன் - அறியாதவனாய் உள்ளேன்; இனி - இனிமேல்; மீண்டும் போய் - திரும்பிச் சென்று (இராமபிரானுக்கு); என் |