பக்கம் எண் :

ஊர் தேடு படலம்221

உரைக்கேன் - யாது கூறுவேன்; இக் கொடுந்துயரம் - (பிராட்டியைக்
காணாத) இப்பெருந்துன்பம்; பொன்றாத பொழுது - செத்தால் அன்றி;
எனக்கு - (மானமுடைய) எனக்கு; போகாது - நீங்காது.

    இறந்தால்துன்பம் நீங்கும் என்பது கருத்து. ஆல் - அசை. ஒன்றானும் -
சிறிதும். ஒன்று ஆயினும் என்பது ஒன்றானும் என வந்தது. ஒன்று - சிறிது.
ஓம்படை ஒன்றும் சொல்லாள் (சிந்தா - 232) இனியர் பரிகாரம் சிறிதும்
கூறாளாய், என எழுதினார். ஆனும் என்பது ஆயினும் என்பதன் திரிபு.                                                  (226)

5061.

‘கண்டுவரும்’ என்று இருக்கும்
     காகுத்தன்கவிக்குலக்கோன்
‘கொண்டுவரும்’என்றிருக்கும்
     யான் இழைத்த கோள் ‘இதுவால்’
புண்டரிகநயனத்தான்
     பால், இனி, யான் போவேனோ ?
விண்டவ ரோடுஉடன்வீயாது
     யான் வாளாவிளிவேனோ.

     காகுத்தன் -(காகுத்தன் மரபில் தோன்றிய) இராமபிரான்; கண்டுவரும்
-
(அனுமன்) சீதையைப் பார்த்து வருவான்;  என்று இருக்கும் -  என்று
எண்ணியிருப்பான்; கவிகுலக்கோன் - குரங்குகளின் தலைவன் (சுக்கிரீவன்);
கொண்டுவரும் -
(அனுமன்) சீதையைக் கொண்டு வருவான்; என்று
இருக்கும் -
என்று எண்ணியிருப்பான்; யான் -  அற்பனாகிய யான்;
இழைத்த -
நிறைவேற்றிய; கோள் இது - இலட்சியமோ இப்படியுள்ளது;
புண்டரிக நயனத்தான்பால் - தாமரைக் கண்ணன் (இராமன்) பால்; இனி -
இனிமேல்;  யான் போவேனோ - யான் செல்வேனோ; விண்டவரோடு -
பகைத்தவர்களுடன்; உடன் வீயாது -  ஒருங்கே சாகாமல்; யான் வாளா -
யான் பயனின்றி; விளிவேனோ -  இறப்பேனோ.

     விண்டவர்என்பதற்கு, அங்கதன் முதலானவர்கள் என்று பொருள்
கூறுவாரும் உளர். அங்கதன் முதலானவர்கள் இறவாமையால் அவ்வுரை
வெவ்வுரை. போரில் இறப்பாரை வீரர் விரும்புவர் என்க - மந்திரப்படலம்
தசரதன் மொழிகளைப் பார்க்கவும்.