பக்கம் எண் :

காட்சிப் படலம்229

பிராட்டியின்;அன்று நிலை - அப்போதைய நிலைமையை; சொல்லுவான்
துணிந்தாம் -
சொல்லுவதற்குத் துணிந்தோம்.

அல்துன்று ஓதி -இருள் போன்ற கூந்தல். துன்று - உவமச் சொல்.
(சிந்தாமணி. 2490 நச்) உவமச் சொல்லாவது வினைச் சொற்களை உவம உருபு
போலப் பயன்படுத்தல். (2)

                                                                                                                       அரக்கியர் கூட்டத்தில் சீதையின் நிலை

5071.

வன்மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு
                                    இருந்தாள்;
கல் மருங்கு,எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா
நல்மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை,
மென்மருங்குபோல், வேறு உள அங்கமும்
                                    மெலிந்தாள்.

கல் மருங்குஎழுந்து - கல்லின் பக்கத்திலே தோன்றி வளர்ந்து;
என்றும் -
எக்காலத்திலும்; ஓர் துளி வரக் காணா - ஒரு நீர்த்துளி
வருதலை யறியாத; நல் மருந்து போல் - உயர்ந்த மூலிகையைப் போல;
வன்மருங்குல் - பருத்த இடையை உடைய; வாள் அரக்கியர் - கொடிய
அரக்கியர்கள்; நெருக்க - துன்புறுத்த (அதனால்); நலன் அற உணங்கிய
நங்கை -
உடல் நலமும் உள நலமும் அற்றுப்போக வாடிய பிராட்டி; மெல்
மருங்குல் போல் -
மெல்லிய இடையைப் போல; வேறு உள அங்கமும் -
மற்றைய அங்கங்களும்; மெலிந்தாள் - இளைத்து; அங்கு இருந்தாள் -
அசோக வனத்தில் இருந்தாள்.

மென்மருங்குல்சிற்றிடையைக்குறிக்கும். அதுபோல் வன்மருங்குல்
பேரிடையைக் குறிக்கும். மருந்து - மூலிகை. மருந்து கொள் மரத்தின் வாள்
வடு மயங்கி (புறம் 180) ‘வாள் அரக்கியர், பல முகத்தார் எழு நூறு பேர்; நல்
மருந்து மிருதசஞ்சீவினி என்பன பழையவுரை (அடை - பதி) (3)

5072.

துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும்
                                   துறந்தாள்;
வெயிலிடைத்தந்த விளக்கு என ஒளி இலா
                                  மெய்யாள்;