பக்கம் எண் :

காட்சிப் படலம்233

     துப்பினால்செய்த - பவளத்தால் செய்யப்பெற்ற; கையொடு கால்
பெற்ற -
கைகளையும் கால்களையும் பெற்ற; துளி மஞ்சு ஒப்பினான்தனை -
மழை பொழியும் மேகம் போன்ற இராமபிரானை; நினைதொறும் - நினைக்கும்
போதெல்லாம்; நெடுங்கண்கள் உகுத்த - நீண்ட கண்கள் சிந்திய;
அப்பினால் நனைந்து - கண்ணீரால் நனையப் பெற்று; அருந்துயர்
உயிர்ப்புடை யாக்கை -
போக்க முடியாத துன்பமும் பெருமூச்சும் பெற்ற
உடம்பின்; வெப்பினால் உலர்ந்து - வெப்பத்தால் உலர்ந்து; ஒருநிலை
உறாத -
ஒருபடித்தாய் இராத; மென்துகிலாள் - மெல்லிய
ஆடையுடையளாய்இராநின்றாள்.

      பவளக்காலும்பவளக்கையும் பெற்ற மேகம், என்றது இல்பொருள்
உவமையணி.                                                (8)

5077.

‘அரிது-போகவோ, விதி வலி கடத்தல் !’ என்று
                                    அஞ்சி,
‘பரிதிவானவன்குலத்தையும், பழியையும், பாரா,
சுருதி நாயகன்,வரும் வரும்’ என்பது ஓர்
                                   துணிவால்
கருதி, மாதிரம்அனைத்தையும் அளக்கின்ற
                                   கண்ணாள்.

     போகவோ -சிறையிலிருந்து தப்பிச் செல்லுதலோ; விதிவலி கடத்தல்
ஓ - விதியின் வலிமையைக்கடந்து போதலோ; அரிது - முடியாததாகும்;
என்று அஞ்சி - என்று கருதி அச்சமுற்று; சுருதி நாயகன் - வேதத்தின்
தலைவனான இராமபிரான்; பரிதி வானவன் குலத்தையும் - தன்னுடைய
சூரிய வம்சத்தையும்; பழியையும் - தனக்கு நேர்ந்த அவமானத்தையும்; பாரா
-
பார்த்து; வரும் வரும் - (உறுதியாக) வருவான் வருவான்; என்பது ஓர்
துணிவால் -
என்று (அடிமனம்) கூறும் உறுதிப்பாட்டால்; கருதி -
இராமபிரானது வருகையை எதிர்பார்த்து; மாதிரம் அனைத்தையும் - எல்லாத்
திசைகளையும்; அளக்கின்ற கண்ணாள் - துழாவிப் பார்க்கும்
கண்களையுடையாள்.

     போதல் என்னும்தொழிற் பெயர் போக என்னும் வடிவம் பெற்றது.
வரல் இயலாது - வர இயலாது என வந்தாற்போல, போகவோ என்பதில்
உள்ள ஓகாரத்தைக் கடத்தல் என்பதுடன் கூட்டவேண்டும். ‘அரிது போகவோ’
என்னும் பாடம் சிறப்புடைத்து. போகவோ,