பக்கம் எண் :

234சுந்தர காண்டம்

கடத்தலோ அரிது - எனமுடிக்க. விதி வலி கடத்தல் போகவோ - அரிது
என்று கூட்டி, விதி வலி கடந்து செல்லுதல் என்பது போக முடியாத அரிய
காரியம் என்றும் கூறுவர் (அடை - பதி) போகவோ, விதி வலி கடத்தல் அரிது
என்று கூட்டி (யான்) உயிர் நீங்குவேன் ஆகவோ என்றால் ஊழ்வினையின்
வலிமையை மீளுதல் அரிது என்றும் கூறுவர் (வை.மு.கோ) விதி வலி கடக்கப்
போவது அரிது என்று கூட்டி - ஊழ்வலியைக் கடக்கச் செல்லவே இயலாது -
என்று கூறும் (அண்மல். கழ) கடக்க என்றும் பாடம் கொள்ளப்பெற்றது. அரிது
போகவோ - இவ்வூரை விட்டுப் போகலாம் என்றாலோ மிகவும்
அரிதாயிருக்கிறது. விதி - தெய்வசங்கற்பமோ வலி கடத்தல் - நமது
செய்கையை விஞ்சியதாக இருக்கிறது என்று உரை வகுத்தவர் வி.
கோவிந்தப்பிள்ளை.                                           (9)

5078.

கமையினாள்திரு முகத்து அயல் கதுப்பு உறக்
                                    கவ்வி,
சுமையுடைக் கற்றை, நிலத்திடைக் கிடந்த, தூ
                                    மதியை
அமைய வாயில்பெய்து, உமிழ்கின்ற அயில் எயிற்று
                                   அரவின்,
குமையுறத்திரண்டு, ஒரு சடை ஆகிய குழலாள்.

     கமையினாள் -பொறுமைஉடைய பிராட்டியின்; திருமுகத்து அயல் -
அழகிய முகத்தின் இரு பக்கங்களிலும்; கதுப்பு உறக் கவ்வி -
கன்னங்களில்நன்றாகப் பற்றி; நிலத்திடைக் கிடந்த - பூமியிலே படிந்துள்ள;
சுமை உடைகற்றை - பாரம் உடைய கூந்தலின் தொகுதியானது; தூமதியை
அமையவாயில் பெய்து -
தூய்மையான சந்திரனை வாயில் இட்டு;
உமிழ்கின்றஅயில் எயிற்று அரவின் - வெளியிலே உமிழ்கின்ற
கூரியபற்களையுடையஇராகுவைப் போல; குமை உறத்திரண்டு - நெருக்கம்
மிகுந்து திரட்சியாகி;ஒரு சடை ஆகிய குழலாள் - ஒரு சடையாகிய
கூந்தலையுடையாள்.

     கமை-பொறுமை.கதுப்பு-கன்னம். நிலத்திடைக் கிடந்த கற்றை என
மாற்றுக. இது “தோல் போர்த்த என்பு உடம்பு” என்பதனை’, என்பு தோல்
போர்த்த உடம்பு’ (குறள்.80) என்று கூறியதை ஒக்கும். நிலத்திடைக் கிடந்த
என்னும் அடைமொழியை மதிக்குச் சேர்ப்பாரும் உளர். குழல் சடையாயிற்று
என்பதைப் போலவே ‘நறுங்குஞ்சி ஈண்டு சடையாயினது என்று பேசுவார்
(கம்ப. 5284)                                               (10)