என்னுடைய தற்போதையநிலையைச் (இராமலக்குவர்க்குச்) சொல்வார்கள்; இப்பிறப்பில் - (ஆதலால்) இந்தப் பிறப்பிலே (இராமலக்குவர்களை); காண்டலோ அரிது - காண்பது அருமையானதாகும்; என்று என்று - என்று பலபடியாக எண்ணி; விம்முறும் - துன்புறுவாள்; கலங்கும் - சஞ்சலம் அடைவாள்; மீண்டு மீண்டு - திரும்பத் திரும்ப; எரி புக்கு - நெருப்பு புகுந்து; நுழைந்தால் என - நுழைந்தாற் போல; மெலிவாள் - தளர்ச்சியடைவாள். கழுகுகட்கு அரசன்இறந்து போயினனோ என்று பிராட்டி ஐயுறுவதாக உரை கூறுவாரும் உளர். சடாயு இறந்து விட்டான் என்று கருதிப் பிராட்டி “வன்துனை உளன் என வந்த மன்னனும் பொன்றினன்” என்று கூறிப் புலம்புகிறாள் (கம்ப. 3447) ஆதலின் அவ்வுரை பொருந்தாது. எருவைகள் - கழுகுகள். நெருப்புச் சுட்ட இடத்திலேயே மீண்டும் நெருப்புப் புகுந்து சுட்டாற் போலப் பிராட்டி வருந்தினாள் என்க. (13) 5082. | ‘என்னை, நாயகன், இளவலை, எண்ணலா வினையேன் சொன்னவார்த்தை கேட்டு, “அறிவு இலள்” எனத் துறந்தானோ ? முன்னை ஊழ்வினைமுடிந்ததோ ?’ என்று, என்று, முறையால் பன்னி, வாய்புலர்ந்து, உணர்வு தேய்ந்து, ஆர் உயிர் பதைப்பாள். |
இளவலை - இளைய பெருமாளை;எண்ணலா வினையேன் - மதியாததீவினையைச் செய்த யான்; சொன்ன வார்த்தை - கூறிய கொடுஞ்சொற்களை;கேட்டு - கேள்விப்பட்டு; நாயகன் - இராமபிரான்; என்னை அறிவு இலள்எனத் துறந்தானோ ? - (அன்புக்குரிய) என்னை அறிவற்றவள் என்று கருதிஒதுக்கித் தள்ளி விட்டானோ; (அல்லது) முன்னை ஊழ்வினை - பழையதீவினையானது; (என்னைத் துன்புறுத்துவதென்று) முடிந்ததோ - தீர்மானித்துவிட்டதோ; என்று என்று - என்று என்று (பலபடியாக); முறையால் -வரிசைப்படி; பன்னி - சொல்லிச் சொல்லி; வாய் புலர்ந்து - நா வறண்டு;உணர்வு தேய்ந்து - உணர்ச்சி தளர்ந்து; ஆர் உயிர் பதைப்பாள் - அரியஉயிர் துடித்து வருந்துவாள். |