பக்கம் எண் :

காட்சிப் படலம்317

 

சொன்ன நீசன்,கை தொடுவதன்முன், துகைத்து
                                   உழக்கி,
பின்னை, நின்றதுசெய்குவென்’ என்பது பிடித்தான்.

     அன்ன காலையில்- அந்தச்சமயத்தில்; அனுமனும் -
அனுமனானவன்; அருந்ததி கற்பின் - அருந்ததி போன்ற கற்புடைய;
என்னை ஆளுடை - என்னை அடிமையாகக் கொண்ட; நாயகன் தேவியை
-
இராமபிரானின் பத்தினியை; என்முன் - எனக்கு எதிரில்; சொன்ன நீசன்
கை -
இழித்துப் பேசிய இராவணன் கை; தொடுவதன் முன் - பிராட்டியைத்
தொடுவதற்கு முன்பு; துகைத்து - காலாலே மிதித்து; உழக்கி - கையாலே
பிசைந்து (கொன்றபின்); பின்னை - மறுபடி; நின்றது செய்குவென் -
நிலைத்த நற்பணியைச் செய்வேன்; என்பது - என்னும் எண்ணத்தை;
பிடித்தான் - உறுதியாகப் பற்றிக் கொண்டான்.

    என்னை ஆளுடைநாயகன் - இராமபிரான். கவிக்கு நாயகர் இருவரும்
(அனுமன், கம்பன்) இங்ஙனம் பேசுவர். (கம்ப. 204.) அனுமன், ‘நின்றது
செய்குவென்’ என்றான். அது அடுத்த பாடல் பேசும். அனுமனும் - உம்.
அசை. ‘காமக்கடல் மன்னும் உண்டே’ (குறள் 464, உரை)           (139)

5208.

‘தனியன்நின்றனன்; தலை பத்தும் கடிது உகத்
                                  தாக்கி,
பனியின்வேலையில் இலங்கையைக் கீழ் உறப்
                                  பாய்ச்சி,
புனித மா தவத்துஅணங்கினைச் சுமந்தனென்
                                  போவென்,
இனிதின்’ என்பதுநினைந்து, தன் கரம்
                             பிசைந்திருந்தான்.

     தனியன் -தனித்துள்ள யான்; நின்றனன் - எழுந்து நின்ற
இராவணனின்; தலைபத்தும் - பத்துத் தலைகளும்; கடிது உகத் தாக்கி -
வேகமாகச் சிதறும்படி மோதி; இலங்கையை - இலங்கை மாநகரை; பனி
வேலையில் -
குளிர்ந்த கடலின்கண்; கீழ் உற - அடிப்பகுதியை அடைய;
பாய்ச்சி - அமிழ்த்துவிட்டு (பிறகு); புனிதம் - தூய்மையான; மாதவத்து
அணங்கினை -
பெருந்தவம் செய்யும் பிராட்டியை; சுமந்தனென் - சுமந்து
கொண்டு; இனிதின் போவென் - மகிழ்ச்சியுடன் (இராவணன்பால்)
செல்வேன்;என்பது