பக்கம் எண் :

324சுந்தர காண்டம்

பசு என்றான்.இப்பாட்டில் அதனால் மேயப்படும் புல் என்றான் - உண்பதும்,
உண்ணப்படுவதும் பிரமம் என்னும் கொள்கை அவன் அறியாமல் வந்தது
போலும். சீதையே உனக்கு விருப்பம் இருப்பின் அவர்களைக் கொல்வேன்
என்பது இராவணாகாரம். கணவனைக் கொன்று மனையாளை அடையும் பண்பு
பாலைப்பண்பு விரிப்பின் பெருகும் தொகுப்பின் குறுகும். திறன் - உபாயம்.
‘உய்திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார்’ (கம்ப. 196)          (148)

இராவணன் சீதையைஅச்சுறுத்திச் செல்லுதல்

5217.

‘பள்ள நீர் அயோத்தி நண்ணி, பரதனே முதலினோர்
                                    ஆண்டு
உள்ளவர்தம்மைஎல்லாம் உயிர் குடித்து, ஊழித்
                                    தீயின்
வெள்ள நீர்மிதிலையோரை வேர் அறுத்து, எளிதின்
                                    எய்திக்
கொள்வென்,நின் உயிரும்; என்னை அறிந்திலை-
                          குறைந்த நாளோய் !’

     குறைந்த நாளோய்- அற்பஆயுளைப் பெற்றவளே; பள்ளநீர் -
அகழி நீரால் சூழப்பெற்ற; அயோத்தி நண்ணி - அயோத்தியை அடைந்து;
பரதன் முதலினோர் - பரதன் முதலாக; ஆண்டு - அங்கே; உள்ளவர்
தம்மை எல்லாம் -
இருப்பவர் யாவரையும்; உயிர் குடித்து - உயிரைப்பருகி;
ஊழித்தீயின் - ஊழிக்காலத்து நெருப்பைப் போலச் சென்று; வெள்ளநீர் -
மிக்க நீர்வளம் பெற்ற; மிதிலையோரை - மிதிலையின்கண் வாழ்பவரை; வேர்
அறுத்து -
அடியோடழித்து; எளிதின் எய்தி - எளிதாகத் திரும்பி வந்து;
நின் உயிரும் - உன்னுடைய உயிரையும்; கொள்வென் - வாங்குவேன்;
என்னை அறிந்திலை - என்னைப்பற்றி அறிந்தாயில்லை.

     கொள்ளுதல் -வாங்குதல் (கவர்தல்) உயிரை வாங்கி விடுவான் என்னும்
வழக்கு நோக்கி அறிக. முதலினோர் - குறிப்பு முற்று. பெயரெச்சப் பொருளில்
வந்தது.                                                 (149)

5218.

ஈது உரைத்து, அழன்று பொங்கி, எரி கதிர் வாளை
                                    நோக்கி,
‘தீது உயிர்க்குஇழைக்கும் நாளும் திங்கள் ஓர்
                           இரண்டில் தேய்ந்தது;