பக்கம் எண் :

326சுந்தர காண்டம்

(இராவணன்)

    வஞ்சியின்செவ்வியாளை - வஞ்சிக் கொடியைவிட மென்மை வாய்ந்த
சீதையை; ஒன்றால் - ஒரு உபாயத்தால்; அஞ்சுவித்தானும் - அச்சமடையச்
செய்தாவது (அன்றேல்); ஒன்றால் - வேறு ஒரு உபாயத்தால்; அறிவுறத்
தேற்றியானும் -
அறிவில் பொருந்தும்படியாகத் தெளிவை உண்டாக்கியாவது;
வசி்த்து - வசப்படுத்தி (பிறகு); என்பால் வருவீர் - என்னிடத்தில்வருவீராக;அன்றேல் - அவ்வாறு செய்யாமற் போனால்; உமக்கு நஞ்சு
ஆவென் -
உங்கட்கு நான் விடம் ஆவேன்; என்னா - என்று; நகையிலா
முகத்து -
சிரிப்பறியா முகத்தையும்; பேழ்வாய் - பிளந்த வாயையும்;
வெஞ்சினத்து -கொடுங் கோபமும் (பெற்ற); அரக்கிமார்க்கு - அரக்கிகட்கு;
வேறு வேறு -தனித்தனியாக; உணர்த்திப் போனான் - அறிவுறுத்திச்
சென்றான்.

     வசித்து -வசப்படுத்தல். தன்னால் முடியாததைத் தன் பணிப் பெண்கள்
முடிப்பர் என்று நினைத்த இராவணனின் அறியாமை பெரிது. ஆசை அறிவை
அழிக்கும்.                                                 (151)

அரக்கியர் சீதையைஅதட்டுதல்

5220.

போயினன்அரக்கன்; பின்னை, பொங்கு அரா
                             நுங்கிக் கான்ற
தூய வெண் மதியம்ஒத்த தோகையைத் தொடர்ந்து
                             சுற்றி,
தீய வல்அரக்கிமார்கள், தெழித்து, இழித்து, உரப்பி,
                             சிந்தை
மேயின வண்ணம்எல்லாம் விளம்புவான், உடன்று
                             மிக்கார்.

     அரக்கன்போயினன் - இராவணன்சென்றுவிட்டான்; பின்னை -
பிறகு; பொங்கு அரா - குமுறுகின்ற இராகு என்ற பாம்பு; நுங்கிக் கான்ற -
விழுங்கிக் கக்கிய; தூயவெண் மதியம் ஒத்த - தூய்மையான சந்திரனைப்
போன்ற; தோகையை - மயில்போலும் பிராட்டியை; தீயவல் அரக்கிமார்கள்
-
தீமை புரிவதில் வல்ல அரக்கிகள்; தொடர்ந்து சுற்றி - நெருங்கிச்
சுற்றியிருந்து கொண்டு; தெழித்து - முழக்கி; இழித்து - அவமதித்து; உரப்பி
-
அதட்டி (பிறகு); சிந்தை மேயின வண்ணம் எல்லாம் -