(இராவணன்) வஞ்சியின்செவ்வியாளை - வஞ்சிக் கொடியைவிட மென்மை வாய்ந்த சீதையை; ஒன்றால் - ஒரு உபாயத்தால்; அஞ்சுவித்தானும் - அச்சமடையச் செய்தாவது (அன்றேல்); ஒன்றால் - வேறு ஒரு உபாயத்தால்; அறிவுறத் தேற்றியானும் - அறிவில் பொருந்தும்படியாகத் தெளிவை உண்டாக்கியாவது; வசி்த்து - வசப்படுத்தி (பிறகு); என்பால் வருவீர் - என்னிடத்தில்வருவீராக;அன்றேல் - அவ்வாறு செய்யாமற் போனால்; உமக்கு நஞ்சு ஆவென் -உங்கட்கு நான் விடம் ஆவேன்; என்னா - என்று; நகையிலா முகத்து -சிரிப்பறியா முகத்தையும்; பேழ்வாய் - பிளந்த வாயையும்; வெஞ்சினத்து -கொடுங் கோபமும் (பெற்ற); அரக்கிமார்க்கு - அரக்கிகட்கு; வேறு வேறு -தனித்தனியாக; உணர்த்திப் போனான் - அறிவுறுத்திச் சென்றான். வசித்து -வசப்படுத்தல். தன்னால் முடியாததைத் தன் பணிப் பெண்கள் முடிப்பர் என்று நினைத்த இராவணனின் அறியாமை பெரிது. ஆசை அறிவை அழிக்கும். (151) அரக்கியர் சீதையைஅதட்டுதல் 5220. | போயினன்அரக்கன்; பின்னை, பொங்கு அரா நுங்கிக் கான்ற தூய வெண் மதியம்ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றி, தீய வல்அரக்கிமார்கள், தெழித்து, இழித்து, உரப்பி, சிந்தை மேயின வண்ணம்எல்லாம் விளம்புவான், உடன்று மிக்கார். |
அரக்கன்போயினன் - இராவணன்சென்றுவிட்டான்; பின்னை - பிறகு; பொங்கு அரா - குமுறுகின்ற இராகு என்ற பாம்பு; நுங்கிக் கான்ற - விழுங்கிக் கக்கிய; தூயவெண் மதியம் ஒத்த - தூய்மையான சந்திரனைப் போன்ற; தோகையை - மயில்போலும் பிராட்டியை; தீயவல் அரக்கிமார்கள் - தீமை புரிவதில் வல்ல அரக்கிகள்; தொடர்ந்து சுற்றி - நெருங்கிச் சுற்றியிருந்து கொண்டு; தெழித்து - முழக்கி; இழித்து - அவமதித்து; உரப்பி - அதட்டி (பிறகு); சிந்தை மேயின வண்ணம் எல்லாம் - |