பக்கம் எண் :

காட்சிப் படலம்329

 

புண்ணில்கோல் இட்டாலன சொல்லி; பொது
                                நோக்காது
எண்ணிக்காணாய், மெய்ம்மையும்’ என்றார், சிலர்
                                எல்லாம்.

     சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள்; பெண்ணில் தீயோய் -
பெண்களுக்குள் தீயவளே; புண்ணில் கோலிட்டாலன - புண்ணிலே அம்பை
ஏவினாற்போல; சொல்லி - கொடிய வார்த்தைகளைப் பேசி; நின்முதல் -
உன் காரணமாக; தீய மானுயர் - தீய இராமலக்குவர்கள்; தத்தம்
வழியோடும் -
தங்கள் தங்கள் மரபுடன்; மண்ணில் - பூமியில்; மாயும்
பிணிசெய்தாய் -
அழிவதற்கு ஏதுவான நோயை உண்டு பண்ணினாய்;
பொதுநோக்காது -
எல்லோரையும் சமமாகப் பாராமல்; எண்ணி -
(சிறப்புற)ஆராய்ந்து; மெய்ம்மையை - உண்மையை; காணாய் -
பார்ப்பாயாக;என்றார் - என்று கூறினர்.

     வழி - மரபு.முதல் - காரணம். எண்ணில் காணாய் - என்று
பாடங்கொண்டு பொது நோக்காது எண்ணில் மெய்ம்மை காணாய் என்று
கூட்டி, பொதுவாகப் பாராமல் எண்ணினால் மெய்ம்மையைக் காணமாட்டாய்
என்று உரை கூறினும் ஏற்கும் - பாரபட்சம் பாராதே என்றுஅறிவுறுத்துகிறார்கள்.                                     (155)

5224.

‘புக்க வழிக்கும், போந்த வழிக்கும், புகை வெந் தீ
ஒக்கவிதைப்பான் உற்றனை அன்றோ ? உணர்வு
                                   இல்லாய் !
இக் கணம்இற்றாய்; உன் இனம் எல்லாம் இனி
                                   வாழா;
சிக்க உரைத்தேம்’ என்று தெழித்தார், சிலர் எல்லாம்.

     சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள்; உணர்வு இல்லாய் -
அறிவற்றவளே (நீ); புக்க வழிக்கும் - புகுந்த கணவன் மரபுக்கும்; போந்த
வழிக்கும் -
பிறந்த தந்தை மரபுக்கும்;  புகை வெந்தீ - புகையுடன் கூடிய
நெருப்பை; ஒக்க - ஒருசேர ; விதைப்பான் உற்றனை அன்றோ - அள்ளித்
தெளிக்க வந்துள்ளாய் அல்லவா; இக்கணம் இற்றாய் - நீ இப்பொழுதே
அழிந்தாய்; உன் இனம் எல்லாம் - உன் கூட்டம் முழுவதும்; இனி வாழா -
இனிமேல் வாழப்போவதில்லை; சிக்க உரைத்தேம் - உறுதியாகச்
சொன்னோம்; என்று தெழித்தார் - என்று கூறி அதட்டினர்.