பக்கம் எண் :

340சுந்தர காண்டம்

பொன்றும் பொழுதே -இறக்கும்சமயத்தில்தான்; புகழ் பூணும் - புகழ்
என்னைச் சேரும்; எனா - என்று கருதி.

     துன்னும் - உவமவாசகம் - வட நூலார் வேற்றுமை உருபை ஆர்த்தி
என்றும் கூறுவர் (பிரயோக விவேகம்) இருந்து - வைராக்கியம் பெற்றது.
இழையாள் அழிவாள் - அழிவாள் முற்றெச்சம். எனா - செயா எனும்
வாய்பாட்டுச் சொல். என்று எனும் பொருள் தரும். ‘இறந்தால் துன்பம் நீங்கும்
என்று நினைப்பது முறையல்ல’ என்பதைப் பிராட்டியின் மூலம் அறிய
இவ்வண்ணம் பேசப்பெற்றது போலும்.                          (10)

கலிவிருத்தம்

5238.

‘பொறை இருந்து ஆற்றி, என் உயிரும் போற்றினேன்,
அறை இருங்கழலவற் காணும் ஆசையால்;
நிறை இரும் பல்பகல், நிருதர் நீள் நகர்ச்
சிறை இருந்தேனை,அப் புனிதன் தீண்டுமோ ?

     அறை - ஒலிக்கின்ற;இருங்கழலவன் - பெரிய வீரக்கழல் அணிந்த
இராமபிரானை; காணும் ஆசையால் - காண வேண்டும் என்னும்
விருப்பத்தால்; பொறையிருந்து - பொறுமையுடன் இருந்து; ஆற்றி -
அமைதிப்படுத்தி; என் உயிரும் - என்னுடைய உயிரையும்; போற்றினென் -
(நீங்காதபடி) பாதுகாத்தேன். (ஆனால்); நிருதர் நீள் நகர் - அரக்கர்களின்
பெரிய நகரில்; நிறை இரும் பல்பகல் - மிகுதியான பல நாட்கள்;
சிறையிருந்தேனை -
சிறையிலிருந்த என்னை; அப்புனிதன் - அந்த ஒப்பற்ற
இராமபிரான்; தீண்டுமோ - தொடுவானோ.

     சிறையிருப்புஇழிவாகக் கருதப் பெற்றது ஆதலின் பிராட்டி இப்படிப்
பேசினாள். ஆனால் பிராட்டி இருப்பால் சிறை புனிதம் பெற்றது. இராமனைக்
காணும் ஆசையால் உயிருடன் இருப்பதாகப் பேசினாள். ‘புண்ணிய மூர்த்தி
தன்னைக் காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன்’ - (கம்ப. 7653.)
என்று பிராட்டி பின்பு பேசுவாள் போற்றுதல் - காத்தல். போற்றின் அரியவை
போற்றல் (திருக்குறள் 613) ஆற்றி - அமைதிப்படுத்தி. இக்கலிவிருத்தம் விளம்
- விளம் - மா - கூவிளம் என்னும் 4 சீர்களைப் பெற்றுவரும். இவ்விருத்தம்
இந்நூலில் 2177 முறை காட்சி தருகின்றது (மணிமலர். 76)              (11)

5239.

‘உன்னினர்பிறர் என உணர்ந்தும், உய்ந்து, அவர்
சொன்னனசொன்னன செவியில் தூங்கவும்,