பக்கம் எண் :

உருக் காட்டு படலம்355

குரங்குகள்; எழுபதுவெள்ளம் கொண்ட - எழுபது வெள்ளம் என்னும்;
எண்ணன -
தொகையைப் பெற்றன; உலகம் எல்லாம் - எல்லா
உலகங்களையும்; தழுவி நின்று எடுப்ப - அணைத்து நின்று சுமப்பன;
வேலை -
கடல்களை; தனித்தனி - பிறர் உதவியில்லாமல் தனித்தனியாக;
கடக்கும் தாள -
தாண்டும் பாதங்களை உடையன; குழுவின -
கூடியிருப்பன; வானின் நீண்ட - ஆகாயம் போல் பரவியுள்ளன.

     எண்ணன, தாள,என்பன குறிப்பு முற்றுகள். அவை வானரம் என்னும்
எழுவாய்க்கு உரியன. செய்தற்கு ஒத்த என்பதை எச்சம் ஆக்காமல்
முற்றாக்கியும் கூறலாம். அப்போது ஒத்த என்பது ஒன்றுபட்டிருப்பன என்னும்
பொருள் தரும். வெள்ளம் - பேரெண்.                          (32)

5260.

‘துப்பு உறுபரவை ஏழும், சூழ்ந்த பார் ஏழும், ஆழ்ந்த
ஒப்பு உறு நாகர்நாடும், உம்பர்நின்று இம்பர்காறும்,
இப் புறம் தேடிநின்னை எதிர்ந்திலஎன்னின்,
                                அண்டத்து
அப் புறம்போயும் தேட, அவதியின் அமைந்து போன.

(அவ்வானரங்கள்)

     துப்புஉறு -வலிமை மிக்க; பரவை ஏழும் - ஏழு கடல்களும்;
சூழ்ந்த-
சூழ்ந்துள்ள; பார் ஏழும் - ஏழு உலகங்களையும்; ஆழ்ந்த -
கீழேஆழ்ந்திருக்கும்; ஒப்புறு - அழகுமிக்க; நாகர் நாடும் - நாகர் வாழும்
பாதாள உலகமும்; உம்பர் நின்று - சுவர்க்க நாடு முதல்; இம்பர் காறும் -
இவ்உலகம் வரையிலும்; இப்புறம் தேடி - இவ்வண்டத்திலே தேடிவிட்டு;
நின்னை எதிர்ந்தில என்னின் - நின்னைக் காணவில்லை என்றால்;
அண்டத்து அப்புறம் போயும் தேட - இந்த அண்டத்துக்கு அப்பாலும்
தேட; அவதியின் - காலக் கெடுவுடன்; அமைந்து போன - உடன்பட்டுச்
சென்றுள்ளன.

     எல்லாஉலகங்களையும் கால எல்லைக்குள் அவை தேடி முடிக்கும்.
அவதி - காலஎல்லை (காலக்கெடு) வானரங்கள் அண்டங் கடந்து செல்லும்
ஆற்றல் வாய்ந்தவை என்பது குறிப்பு. இராவணன் பேசிய பேச்சுக்கு
நச்சுமுறியாக அனுமன் வழங்கியவை அனைத்தும் பிராட்டிக்கு நம்பிக்கை
ஊட்டுபவை. துப்பு - பவளம் என்றும் கூறலாம். ஒப்புற - அழகுமிக்க.
ஒப்புடை ஒருவனை உருவழிய.... விழித்தவனே (சம்பந்தர் 262 -7 ) பார்
என்றது கடல்களால் சூழப்பெற்ற நாவலந்தீவு முதலானவற்றை, நாடுகள் யாவும்
கடலாற் சூழப் பெற்றவை அறிக. தீவுகளின் பெயரை, தீவு ஏழ் அவைதாம்
நாவல், இறலி, குசை, கிரௌஞ்சம்,