பக்கம் எண் :

உருக் காட்டு படலம்409

தளிர்க்கும்மேனியாள் உலகில் குழு இலது குறுகுவாய் என்றாள் என
முடிக்க. முற்றிய - முதிர்ந்த - ஈண்டு முதிர்ச்சி என்றது அறிவின் முதிர்ச்சியை.
அனுமன் பேருரு தனக்குச் சிறைவீடு கிடைக்கும் என்னும் நம்பிக்கை உண்டு
பண்ணுதலின் பிராட்டி பூரித்தாள். எழில் - எழுச்சி. இனி - இப்போது. இனி
நினைந்து இரக்கம் ஆகின்று (புறம்) முற்றிய குழு என்பதற்கு வலிமை மிகுந்த
சாமார்த்தியம் என்று பொருள் கூறுவாரும் உளர். (107)

5335.

ஆண்தகைஅனுமனும், ‘அருளது ஆம்’ எனா,
மீண்டனன்,விசும்பு எனும் பதத்தை மீச் செல்வான்,
காண்டலுக்குஉரியது ஓர் உருவு காட்டினான்;
தூண்டல் இல்விளக்கு அனாள் இனைய
                                             சொல்லினாள்.

விசும்பு எனும் -ஆகாயம்என்று கூறப்படும்; பதத்தை மீச்
செல்வான் -
இடத்தையும் கடந்து மேலே செல்பவனான; ஆண்டகை
அனுமனும் -
ஆண்மை மிக்க அனுமனும்; (தான் கொண்ட பேர்உரு)
அருளதாம் எனா - தங்கள் திருவுள்ளத் தருளின்படி என்று கூறி;
மீண்டனன் - திரும்பி ஒடுங்கி; காண்டலுக்கு உரியது - காண்பதற்கு
எளிதான; ஓர் உருவு காட்டினான் - ஒரு வடிவத்தைக் காண்பித்தான்
(அப்போது); தூண்டல் இல் - தூண்டுதல் இல்லாத; விளக்கு அனாள் -
விளக்கை ஒத்த பிராட்டி; இனைய சொல்லினாள் - இந்த வார்த்தைகளைக்
கூறினாள்.

பிராட்டி அடங்குகஎன்று கூறிய ஆணையை அருள் என்றான். (108)

                                                                                        அறுசீர்விருத்தம்

5336.

இடந்தாய் உலகை மலையோடும், எடுத்தாய் விசும்பை
                                         இவை சுமக்கும்
படம் தாழ் அரவைஒரு கரத்தால் பறித்தாய்,
                                         எனினும், பயன் இன்றால்;
நடந்தாய் இடையேஎன்றாலும், நாண் ஆம் நினக்கு;
                                         நளிர் கடலைக்
கடந்தாய்என்றல் என் ஆகும் ?-காற்றாம் அன்ன
                                         கடுமையாய் !