பக்கம் எண் :

உருக் காட்டு படலம்411

அடையாமல்; ஊழிபலவும் - பல யுகங்களும்; நிலை நிறுத்தற்கு -
நிலைத்துநிற்பதற்கு; ஒருவன் நீயே - ஒப்பற்ற நீயே; உளை ஆனாய் -
(தகுதி)உள்ளவன் ஆனாய்; நின் பெருமைக்கு ஏற்ப - உன்னுடைய
விசுவரூபத்துக்குப் பொருத்தமாக; பகை இலங்கை - உலகத்தின் பகையான
இலங்கையானது; ஏழு கடற்கும் - ஏழு சமுத்திரங்களுக்கும்; அப் புறத்தது -
அப்பால் இருப்பதாக; ஆகாதது - அமையாமல்; இருந்தது - (ஒரு கடலின்
நடுவில்) இருப்பது; இழிவு அன்றோ - (உன் சிறப்புக்கு) தாழ்வு அல்லவா.

     அனுமனின்வீரத்துக்கு ‘உரைகல்’ ஒரு கடல் கடந்ததன்று. அவன் ஏழு
கடலைக் கடந்தால்தான் அவன் வீரம் சரியாக உணரப்படும் என்பது குறிப்பு.
                                                         (110)

5338.

‘அறிவும் ஈதே, உரு ஈதே, ஆற்றல் ஈதே, ஐம்
                                புலத்தின்
செறிவும் ஈதே,செயல் ஈதே, தேற்றம் ஈதே,
                                தேற்றத்தின்
நெறியும் ஈதே,நினைவு ஈதே, நீதி ஈதே, நினக்கு
                                என்றால்,
வெறியர்அன்றோ, குணங்களான் விரிஞ்சன்
                       முதலாம் மேலானோர் ?

(அனுமனே)

     நினக்கு -உனக்கு;அறிவும் ஈதே - ஞானமும் இதுவேயாகும்; உரு
ஈதே -
அழகும் இதுவேயாம்; ஆற்றல் ஈதே - வலிமையும் இதுவேயாம்;
ஐம்புலத்தின் செறிவும் ஈதே - ஐம்புலன்களின் அடக்கமும் இதுவேயாகும்;
செயல் ஈதே - செய்கையும் இதுவேயாகும்; தேற்றம் ஈதே - தெளிவும்
இதுவேயாகும்; தேற்றத்தின் நெறியும் ஈதே - தெளிவு மேற்கொள்ளும்
வழியும் இதுவேயாகும்; நினைவு ஈதே - எண்ணமும் இதுவேயாகும்; நீதி
ஈதே -
நீதியும் இதுவேயாகும்; என்றால் - என்று அமையுமானால்;
விரிஞ்சன் முதலாம் மேலானோர் - பிரமன் முதலான தேவர்கள்;
குணங்களால் - பண்புகளால்; வெறியர் அன்றோ - வெறுமையானவர்கள்
அல்லவா.

     ஈதே, ஈதே என்றுதிரும்பத் திரும்பப் பேசப்பட்டது, அனுமன் பேருரு.
அவன் பேருருவுக்கும் அறிவு முதலானவற்றுக்கும் வேறுபாடில்லை. பண்பும்
பண்பியும் ஒன்றாயிற்று. அனுமன் கொண்ட