பக்கம் எண் :

சூடாமணிப் படலம்423

அடிமை - என்னுடைய தொண்டு;என் ஆம் - என்ன பயனுடையதாகும்.

     செயலாகவெளிப்படாத தொண்டு பயனில்லை என்பது குறிப்பு. அருந்ததி
போல்வாளை அருந்ததி என்றது ஆகுபெயர். இராமன் என்னும் சொல்
அழகன் என்று தமிழ் வடிவம் பெறுகின்றது. வீடு விடுதலை. ‘வீடு பெறல் யாது
என விலங்கிழைவினவ’ (பெருங்கதை) 5-3-107) நெடுவஞ்சகர் - பெரிய
வஞ்சகர். நெடு என்பது பெரிது என்னும் பொருள் தரும். ‘நெடுவஞ்சமும்,
பாவமும் பொய்யும் வல்லநாம்’ (கம்ப. 7356) நெடு என்பதைச் சிறைக்கு
அடைமொழியாக்கி நீண்ட சிறை என்று உரை கூறினாரும் உளர். என் அடிமை
என்னாம் என்ற இடத்து ‘அடிமை சால அழகுடைத்தே’ என்னும் திருவாசகம்
நினைக்க.                                               (6)

5351.

‘புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்,
விண்டவர்வலத்தையும் விரித்து உரைசெய்கேனோ ?
“கொண்டுவருகிற்றிலென்; உயிர்க்கு உறுதி
                                கொண்டேன்;
கண்டுவருகிற்றிலென்” எனக் கழறுகேனோ ?

(அம்மையே)

     உயிர்க்கு உறுதிகொண்டேன் - உயிருக்குப்பாதுகாப்பைத் தேடிக்
கொண்டயான்; புண் தொடர்வு - போரால் உண்டாம் விழுப்புண்களின்
சம்பந்தத்தை; அகற்றிய புயத்தி னொடு - விலக்கிக் கொண்ட தோள்களுடன்;
புக்கேன் - இராமபிரான் சந்நிதானத்தை அடைந்து; விண்டவர் வலத்தை -
பகைவர்களின் பலத்தை; விரித்து உரை செய்கேனோ - விவரித்துப்
பேசுவேனோ ? (அல்லது) (யான்); கண்டு வருகிற்றிலென் - பிராட்டியைக்
கண்டு வரும் ஆற்றல் பெற்றேன் இல்லை; (அதனால்) (பிராட்டியை) கொண்டு
வருகிற்றிலென் -
கொண்டு வரும் பாக்கியம் பெற்றேன் இல்லை; என
கழறுகேனோ -
என்று பொய் கூறுவேனா.

     வலத்தையும்என்பதில் உள்ள ‘உம்’ அசை. மடத்தகை அவளொடும்
வதுவை நாட்டி (சிந்தா 1173) இங்கு இனியர் ‘உம்மை அசை’ என்று
வரைந்தார். அரக்கர்கள் வன்மை உடையவர்கள். அதனால் பிராட்டியைக்
கண்டிலேன்; அதனால் வெறுங்கையுடன் வந்தேன் என்று பொய் மொழி
கூறட்டுமா என்று அனுமன் வருந்திக் கூறினான். உறுதி - பாதுகாப்பு.
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலரடி சுமந்து வாழ்தி (கம்ப. 4090)     (7)