பக்கம் எண் :

424சுந்தர காண்டம்

5352.

‘ “இருக்கும் மதிழ் சூழ் கடி இலங்கையை
                             இமைப்பின்
உருக்கி எரியால், இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி, நிருதக்குலம் முடித்து, வினை முற்றிப்
பொருக்க அகல்க”என்னினும், அது இன்று
                             புரிகின்றேன்.

(அனுமனே நீ)

     மதில் சூழ் -மதில்களால் சூழப்பட்டு; கடி - காவலுடன்; இருக்கும்
இலங்கையை -
இருக்கின்ற இலங்கை மாநகரை; இமைப்பின் எரியால்
உருக்கி -
இமைப்பதற்குள் நெருப்பினாலே உருக்கி விட்டு (பின்); இகல் -
மாறுபாடு கொண்ட; அரக்கனையும் - இராவணனையும்; ஒன்றா - ஒருசேர;
முருக்கி - அழித்து; நிருதக் குலம் முடித்து - அரக்கர் கூட்டத்தை ஒழித்து;
வினைமுற்றி - செயலை நிறைவு செய்துவிட்டு; பொருக்க - விரைவாக;
அகல்க என்னினும் - இலங்கையைவிட்டு நீங்குக என்று கட்டளை
இட்டாலும்; அது - அச்செயலை; இன்று புரிகின்றேன் - இப்பொழுது
செய்வேன்.

     இலங்கைபொன்னால் அமைந்தது ஆதலின் அதனை ‘உருக்குக’ என்று
கட்டளை இட்டால் நிறைவேற்றுவேன் என்றான். ‘ஆடகத்தாரைகள் உருகி
வேலையின் ஊடு புக்குற்றன’ என்று மேலே பேசப்படும் (கம்ப. 5953.)
பொருக்க - விரைவாக. பொருக்க நும்வினை போயதும் (தேவாரம் - நாவரசர்
144-11) முடித்து - அழித்து. ‘வேந்தர் குலமும்... குழலும் முடியாது இராள்’
என்பர் வில்லியார் (கிருட்டினன் தூது 48)                        (8)

5353.

‘இந்துநுதல்! நின்னொடு இவண் எய்தி, இகல் வீரன்,
சிந்தை உறு வெந்துயர் தவிர்ந்து, தெளிவோடும்,
அந்தம் இல்அரக்கர் குலம் அற்று அவிய நூறி,
நந்தல் இல்புவிக்கண் இடர், பின் களைதல் நன்றால்.

     இந்து நுதல் ! -சந்திரனைஒத்த நெற்றியை உடைய அம்மையே;
இகல் வீரன் - பேராற்றல் பெற்ற இராமபிரான்; (நின்னைப் பெற்றமையால்)
சிந்தை உறு - மனத்திலே மிக்குள்ள; வெம்துயர் தவிர்ந்து - பெருந்துன்பம்
நீங்கப் பெற்று; தெளிவோடும் - அறிவுத் தெளிவுடனே; நின்னொடு -
உன்னுடன்; இவண் எய்தி - இந்த இலங்கையை அடைந்து. பின் - பிறகு;
அந்தம் இல் -