அனுமன், மிகுதியையும்பெருமையையும் குறிக்க. அரக்கர் கூட்டம் கடல் எனப்பட்டது. அரக்கர் கூட்டத்தைக் கடல் என்றதற்கு ஏற்பக் கலக்கி என்ற சொல் பொருத்தமாக வந்தது. மண்டோதரி மந்த உதரத்தவள். சுருங்கிப் படிந்த வயிற்றினள் என்று பொருள். (4) 5433. | ‘மீட்டும் இனி, எண்ணும் வினை வேறும் உளது அன்றால்; ஓட்டி இவ்அரக்கரை உலைத்து, உரிமை எல்லாம் காட்டும் இதுவேகருமம்; அன்னவர் கடும் போர் மூட்டும் வகையாவதுகொல் ?’ என்று முயல்கின்றான். |
இவ் அரக்கரைஉலைத்து ஒட்டி -இந்த அரக்கர்களை எல்லாம் வருத்தி ஓடச் செய்து; உரிமை எல்லாம் - நான், இராமபிரானுக்கு அடியனாகும் உரிமைத் தன்மை எல்லாம்; காட்டும் இதுவே கருமம் - வெளிப்படையாகக் காட்டுகின்ற இதுவே நான் செய்யத் தக்க செயல்; இனி, மீட்டும் எண்ணும் வினை - இனிமேல், மறுபடியும் ஆலோசிக்க வேண்டிய காரியம்; வேறும் உளது அன்று - வேறு ஒன்றும் இல்லை; அன்னவர் - அந்த அரக்கரை; கடும் போர் மூட்டும் வகை - கொடிய போரில்மூளச் செய்யும் விதம்; யாவது கொல் என்று முயல்கின்றான் - எதுவாகும் என்று நினைத்து (அதற்குரிய உபாயத்தை) ஆலோசிப்பவனாயினான் அனுமன். அரக்கரைப்போர் மூட்டி அழிப்பதே தான் செய்யத்தக்க செயல் என்றும், அதுவே அடியவனாகக் காட்டுதற்குரியதென்றும் அனுமன் எண்ணுகின்றான். ஆல். கொல்; அசை. (5) 5434. | ‘இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால், அப் பெரிய பூசல்செவி சார்தலும், அரக்கர் வெப்புறுசினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால், துப்பு உறமுருக்கி, உயிர் உண்பல், இது சூதால். |
இப்பொழிலினைக்கடிது இறுக்குவென் - இந்தச் சோலையை விரைவில் முறித்து அழிப்பேன்; இறுத்தால் - அவ்வாறு யான் அழித்தால்; அப்பெரிய பூசல் செவி சார்தலும் - அந்தப் பெரிய ஆரவாரம் தமது காதில்பட்டவுடன்; அரக்கர் வெப்பு உறு சினத்தர் - அரக்கர்கள் கொடுமைமிக்ககோபத்தினராகி; எதிர் மேல் வருவர் - என்மேல் எதிர்த்துப் போர் புரியவருவார்கள்; வந்தால் - |