பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்479

போயின; எரிந்தன- நெருப்புப் பற்றி எரிந்து விட்டன; கரிந்த - கருகிப்
போயின; ஒடிந்தன - ஒடிபட்டன; ஒசிந்தன - துவண்டு சாய்ந்தன;
உதிர்ந்தன -
வலியற்று உதிர்வன ஆயின; பிதிர்ந்த - சின்னபின்னப்பட்டன.

     மரங்களின்அழிவு, பல வினைச் சொற்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                                           (9)

5438.

வேரொடுமறிந்த சில; வெந்த சில; விண்ணில்
காரொடு செறிந்தசில; காலினொடு வேலைத்
தூரொடு பறிந்தசில; தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்தசில; உக்க, சில நெக்க;

     சில வேரொடுமறிந்த - சில மரங்கள் வேரொடுகீழே விழுந்தன;
சிலவெந்த - சில மரங்கள் வெந்து போயின; சில விண்ணில் காரொடு
செறிந்த-
சில மரங்கள் ஆகாயத்தில் உள்ள மேகத்தோடு நெருங்கின; சில
காலினொடு வேலை தூரொடு மறிந்த -
சில மரங்கள் காற்றினால் கடலில்
உள்ள சேற்றோடு குப்புற்று வீழ்ந்து அழிந்தன; சில தும்பியொடு வானோர்
ஊரொடு -
சில, வண்டுகளோடு தேவ நகரங்களில் சென்று; மலைந்த -
மோதின; சில நெக்க உக்க - சில பிளந்து சிதறிச் சிந்தின.

     அசோக வனத்துமரங்கள், இடம் பெயர்ந்து சென்றமையைத்
தெரிவிக்கின்றது இக்கவிதை.                                  (10)

5439.

சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் போர்
ஆனை நுகரக்குளகும் ஆன; அடி பற்றா
மேல் நிமிரவிட்டன, விசும்பின் வழி மீப் போய்,
வானவர்கள்நந்தன வனத்தையும் மடித்த.

     சுழற்றிய -அனுமனால்சுழற்றி எறியப்பட்ட; சோனை முதல் மற்றவை-
மேகத்தைத் தம்மிடம் கொண்ட மற்றும் சில மரங்கள்; திசைப்
போர்ஆனை நுகரக் குளகும் ஆன -
எட்டுத்திக்குகளையும் காக்கும்
போரில்சிறந்த யானைகள் உண்ணும் தழை உணவு ஆயின; அடி பற்றாமேல்
நிமிரவிட்டன -
அடியைப் பற்றி வானத்தில் செல்லும் படி வீசி எறியப்பட்ட
சிலமரங்கள்; விசும்பின் வழி மீப் போய் - ஆகாய வழியாக மேலே
சென்று;வானவர்கள் நந்தனவனத்தையும் மடித்த - தேவர்களது அழகிய
பூஞ்சோலையையும் அழித்தன.