பக்கம் எண் :

482சுந்தர காண்டம்

     பொன் மரங்களும்இரத்தின மரங்களும் அச் சோலையில்
கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன போலும்.                     (15)

5444.

புள்ளினொடு வண்டும், மிஞிறும், கடிகொள் பூவும்,
கள்ளும்,முகையும், தளிர்களோடு இனிய காயும்,
வெள்ள நெடுவேலையிடை, மீன்இனம் விழுங்கித்
துள்ளின; மரன்பட, நெரிந்தன துடித்த.

     புள்ளினொடுவண்டும் மிஞிறும் - (எறியப்பட்டமரங்களில் உள்ள)
பறவைகளையும் வண்டுகளையும் மிஞிறுகளையும்; கடி கொள் பூவும் -
நறுமணம் உள்ள மலர்களையும்; முகையும் கள்ளும் - அரும்புகளையும்
தேனையும்; தளிர்களோடு இனிய காயும் - துளிர்களையும் இன் சுவையுள்ள
காய்களையும்; வெள்ள நெடு வேலையிடை - நீர்ப்பெருக்கை உடைய பெரிய
கடலிலே; மீன் இனம் விழுங்கித் துள்ளின - உள்ள மீன் கூட்டங்கள்
உட்கொண்டு (மனக்களிப்பால்) துள்ளிக் குதித்தன; மரன்பட நெரிந்தன
துடித்த -
(பிறகு) வீழ்ந்த மரங்கள் தம் மேற்பட்டுத்தாக்குவதால்
நசுங்கினவாகித் துடிக்கலாயின.

     கடலில் விழுந்தபறவை முதலியவற்றை உண்டு மகிழ்ந்த மீன்கள். பிறகு
மரங்களின் தாக்குதலால் நெரிந்து துடித்தன. இன்பமும் துன்பமும் கலந்தது
வாழ்க்கை. இத்தத்துவம் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. தேன்; மிஞிறு -
தேனீ. (புறம் 12)                                         (16)

5445.

தூவியமலர்த்தொகை சுமந்து, திசைதோறும்
பூவி்ன் மணம்நாறுவ, புலால் கமழ்கிலாத,
தேவியர்களோடும்உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய,திரை ஆர்கலிகள் அம்மா !

     தூவிய மலர்த்தொகை சுமந்து - சிதறின மலர்களின்கூட்டங்களைத்
தாங்கி; திசை தோறும் பூவின் மணம் நாறுவ - எங்கும் மலர்களின்
மணமேவீசுவன; (அதனால்); புலால் கமழ்கிலாத - புலால் நாற்றம் வீசாமல்
அடங்கியுள்ளனவான; திரை ஆர்கலிகள் - அலைகளை உடைய கடல்கள்;
உயர் தேவர் தேவியர்களோடு இனிது ஆடும் -
உயர்ந்த தேவர்கள் தம்
மனைவிமார்களுடன் மகிழ்வோடு நீராடுகின் ற; ஆவி எனல் ஆய -
(தாமரைப் பூக்களோடுகூடிய) பொய்கை என்று சொல்லத் தக்கனவாயின.