பொன் மரங்களும்இரத்தின மரங்களும் அச் சோலையில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன போலும். (15) 5444. | புள்ளினொடு வண்டும், மிஞிறும், கடிகொள் பூவும், கள்ளும்,முகையும், தளிர்களோடு இனிய காயும், வெள்ள நெடுவேலையிடை, மீன்இனம் விழுங்கித் துள்ளின; மரன்பட, நெரிந்தன துடித்த. |
புள்ளினொடுவண்டும் மிஞிறும் - (எறியப்பட்டமரங்களில் உள்ள) பறவைகளையும் வண்டுகளையும் மிஞிறுகளையும்; கடி கொள் பூவும் - நறுமணம் உள்ள மலர்களையும்; முகையும் கள்ளும் - அரும்புகளையும் தேனையும்; தளிர்களோடு இனிய காயும் - துளிர்களையும் இன் சுவையுள்ள காய்களையும்; வெள்ள நெடு வேலையிடை - நீர்ப்பெருக்கை உடைய பெரிய கடலிலே; மீன் இனம் விழுங்கித் துள்ளின - உள்ள மீன் கூட்டங்கள் உட்கொண்டு (மனக்களிப்பால்) துள்ளிக் குதித்தன; மரன்பட நெரிந்தன துடித்த - (பிறகு) வீழ்ந்த மரங்கள் தம் மேற்பட்டுத்தாக்குவதால் நசுங்கினவாகித் துடிக்கலாயின. கடலில் விழுந்தபறவை முதலியவற்றை உண்டு மகிழ்ந்த மீன்கள். பிறகு மரங்களின் தாக்குதலால் நெரிந்து துடித்தன. இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை. இத்தத்துவம் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. தேன்; மிஞிறு - தேனீ. (புறம் 12) (16) 5445. | தூவியமலர்த்தொகை சுமந்து, திசைதோறும் பூவி்ன் மணம்நாறுவ, புலால் கமழ்கிலாத, தேவியர்களோடும்உயர் தேவர் இனிது ஆடும் ஆவி எனல் ஆய,திரை ஆர்கலிகள் அம்மா ! |
தூவிய மலர்த்தொகை சுமந்து - சிதறின மலர்களின்கூட்டங்களைத் தாங்கி; திசை தோறும் பூவின் மணம் நாறுவ - எங்கும் மலர்களின் மணமேவீசுவன; (அதனால்); புலால் கமழ்கிலாத - புலால் நாற்றம் வீசாமல் அடங்கியுள்ளனவான; திரை ஆர்கலிகள் - அலைகளை உடைய கடல்கள்; உயர் தேவர் தேவியர்களோடு இனிது ஆடும் - உயர்ந்த தேவர்கள் தம் மனைவிமார்களுடன் மகிழ்வோடு நீராடுகின் ற; ஆவி எனல் ஆய - (தாமரைப் பூக்களோடுகூடிய) பொய்கை என்று சொல்லத் தக்கனவாயின. |