பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்483

    ஆர்கலிகள்(கடல்கள்) தேவருலகில் உள்ள பூம் பொய்கை போல்
விளங்கின. கடல்களில் விழுந்த மலர்த்தொகையின் மிகுதி
உணர்த்தப்பெறுகின்றது. ஆவி - பொய்கை. அம்மா; வியப்பு இடைச்சொல்.
                                                      (17)

5446.

இடந்த மணிவேதியும், இறுத்த கடி காவும்,
தொடர்ந்தனதுரந்தன படிந்து, நெறி தூர,
கடந்து செலவுஎன்பது கடந்தது, இரு காலால்
நடந்து செலல்ஆகும் எனல் ஆகியது, நல் நீர்.

     இடந்த மணிவேதியும் - (அனுமன்)பெயர்த்தெறிந்த
இரத்தினமயமானமேடைகளும்; இறுத்த கடிகாவும் - ஒடித்த காவலுள்ள
சோபையின்மரங்களும்; தொடர்ந்தன தரந்தன - தொடர்ந்து வேகமாகச்
சென்று; படிந்து,நெறிதூர - கடலிலே ஒழுங்காக விழுந்து, அதனை
வழிபோலத் தூர்த்துவிட்டதனால்; நல்நீர் - மணம் கொண்ட கடலானது;
கடந்து செலவு கடந்தது-
தாண்டிச் செல்ல வேண்டியது என்ற தன்மையைக்
கடந்ததாகி; நடந்துசெலல் ஆகும் எனல் ஆகியது - நடந்து செல்லக்
கூடியது என்றுசொல்லத்தக்கதாயிற்று.

     அனுமன் இலங்கைவரும் போது, கடல் கடப்பதற்குரியதாக இருந்தது.
திரும்பும் போது அது, நடப்பதற்குரியதாயிற்று.                    (18)

5447.

வேனில்விளையாடு சுடரோனின் ஒளி விம்மும்
வானினிடை வீசியஅரும் பணை மரத்தால்,
தானவர்கள்மாளிகை தகர்ந்து பொடி ஆய-
வான இடியால்ஒடியும் மால் வரைகள் மான.

     வேனில் விளையாடுசுடரோனின் - கோடைக்காலத்தில் முழு
உற்சாகத்தோடு காய்கின்ற சூரியனைப் போல; ஒளி விம்மும் வானின் இடை
-
ஒளி மிகுகின்ற ஆகாயத்தில்; வீசிய இரும்பணை மரத்தால் - (அனுமன்)
வீசி எறிந்த மிகப் பெரிய மரங்களால்; தானவர்கள் மாளிகை - அரக்கரது
மாளிகைகள்; வான இடியால் ஒடியும் மால் வரைகள் மான -
ஆகாயத்திலிருந்து விழும் இடியினால் உடைந்த பெரிய மலைகளைப் போல்;
தகர்ந்து பொடியான -
இடிந்து பொடிபட்டன.

     மரங்களால்தாக்குண்டு விழுந்த அரக்கர் மாளிகைகளுக்கு, இடிகளால்
தாக்குண்டு அழியும் மலை ஒப்பு. உவமை அணி.                  (19)