| 5448. | எண் இல்தரு கோடிகள் எறிந்தன செறிந்தே, தண்ணென்மழைபோல் இடை தழைந்தது;சலத்தால், அண்ணல் அனுமான்,‘அடல் இராவணனது, அந் நாள், விண்ணினும் ஓர்சோலை உளது ஆம்’ என, விதித்தான். |
அந் நாள்எறிந்தன - அந்த காலத்தில்,(தான்) பிடுங்கி எறிந்தனவான;எண் இல் தரு கோடிகள் செறிந்து - அளவிறந்த மரங்களின் கூட்டங்கள்நெருங்கி; தண்ணென் மழை போல் - குளிர்ந்த மேகம் போல; இடைதழைந்தது - விண்ணிடத்தில் தழைந்து தோன்றியது; (அதனால்) அண்ணல்அனுமான் - பெருமை பொருந்திய அனுமான்; சலத்தால் - கோபத்தால்;அடல் இராவணனது - வலிமை மிக்க இராவணனுடைய; ஓர் சோலை -அசோகவனச் சோலை; விண்ணினும் உளது ஆம் என விதித்தான் -வானத்தும் உள்ளது என்று சொல்லும் படிச் செய்தான். கோடி - கூட்டம்:‘சீவகோடிகள்’ என்பது போல. இராவணனுக்கு வானத்திலும் ஒரு சோலை இருக்கிறது என எண்ணும்படியாக அசோகவனத்து மரங்களை அனுமன் விண்ணிலே சிதறி எறிந்தான் என்பது கருத்து. (20) | 5449. | தேன் உறைதுளிப்ப, நிறை புள் பல சிலம்ப, பூ நிறை மணித்தரு விசும்பிடை போவ, மீன் முறைநெருக்க, ஒளி வாளொடு வில் வீச, வானிடை நடாயநெடு மானம் எனல் ஆன. |
தேன் உறைதுளிப்ப - தேன் துளிகள்சிந்தவும்; நிறை புள்பல சிலம்ப - அங்கு நிறைந்து வாழ்ந்து வந்த பறவைகள் ஒலிக்கவும்; பூ நிறை மணித் தரு - மலர்கள் நிறைந்த இரத்தினமயமான மரங்கள்; விசும்பின் இடை போவ - ஆகாயத்தினிடத்தே போவனவாய்; மீன் முறை நெருக்க - (அவ் விண்ணில் உள்ள) நட்சத்திரங்கள் முறையே நெருக்கவும்; ஒளி வாளொடு வில் வீச - ஒளியானது வாளொடு போட்டியிட்டு ஒளி வீசவும்; வானிடை நடாய நெடு மானம் எனல் ஆய - ஆகாயத்தில் செல்லும் பெரிய விமானம் என்று சொல்லத்தக்கனவாயின. |