பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்485

     அனுமன் வீசிஎறிந்த மரங்களில் உள்ள பூக்களும், அவற்றில் உள்ள
மணிகளும்  வீசும் ஒளி வாள் போல, விளங்கின. மானம் - விமானம்; முதற்
குறை.                                                   (21)

5450.

சாகம் நெடுமாப் பணை தழைத்தன; தனிப் போர்
நாகம் அனையான்எறிய, மேல் நிமிர்வ-நாளும்
மாக நெடு வானிடைஇழிந்து, புனல் வாரும்
மேகம் எனல்ஆய-நெடு மா கடலின் வீழ்வ.

     தனிப் போர்நாகம் அனையான் எறிய - ஒப்பற்ற  போரில்சிறந்த
யானை போன்ற வலிமை பெற்ற அனுமன் வீசி எறிந்ததனால்; நெடு மாப்
பணை சாகம் தழைத்தன -
நீண்ட பெரிய கிளைகளும் இலைகளும்
தழைத்தனவும்; மேல் நிமிர்வ - மேலே எழுந்து விளங்குவனவும்; நெடு
மாகடலின் வீழ்வ -
பிறகு நெடிய பெரிய கடலில் வீழ்வனவுமாகிய மரங்கள்;
நாளும் -
எல்லாக் காலத்தும்; நெடு மாக வான்  இடை கிழிந்து - மிகப்
பெரிய ஆகாயத்திலிருந்து கீழே இறங்கி; புனல் வாரும் மேகம் எனல் ஆய
-
கடல் நீரை முகப்பனவான மேகம் என்று சொல்லத்தக்கன வாயின.

     மாகம் - வானம்;மாக வான் - ஒரு பொருட் பன்மொழி.       (22) 

கலிவிருத்தம்

(வேறு வகை)

5451.

ஊனம்உற்றிட, மண்ணின் உதித்தவர்,
ஞானம் முற்றுபுநண்ணினர் வீடு என,
தான கற்பகத்தண்டலை விண்தலம்
போன, புக்கன,முன் உறை பொன்னகர்.

     ஊனம் உற்றிட -குற்றம்நேர்ந்திட்டதனால்; மண்ணில் உதித்தவர் -
இந்த மண்ணுலகத்தில் பிறந்த தேவர்கள்; ஞானம் முற்றுபு - பிறகு ஞானம்
முழுமையாக நிரம்பியவுடன்; வீடு நண்ணினர் என - துறக்கத்தை
அடைந்தவர்களைப் போல; தான கற்பகத் தண்டலை - கொடைக்குணம்
பெற்ற கற்பக மரங்கள் அடர்ந்த அந்த அசோகவனச் சோலை; விண்தலம்
போன -
அனுமனால் வீசி எறியப்பட்டு வான் வழியாகச் சென்று; முன்