| | வெயில்கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன, புயல் கடல்தலைபுக்கன போல்வன. |
வாரி நேர்இயக்கு உற - கடலுக்கு நேராகச்சென்று விழும்படி; திசைதொறும் எறிந்தன - எல்லாத்திக்குகளிலும் எறியப்பட்டனவாகிய; மயக்கு இல்பொன் குல வல்லிகள் - ஒளி மழுங்குதல் இல்லாத பொன் மயமானகூட்டமாக உள்ள கொடிகள்; வெயில் கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன -சூரிய கிரணங்களின் தொகுதி அறுபட்டு (பூமியில்) பொருந்தி வீழ்ந்தனவாகி;புயல் கடல் தலை பூக்கன போல்வன - மேகங்கள் படிகின்ற கடலினிடத்துப்புகுந்தனவற்றை ஒப்பனவாயின. அனுமன் வீசிஎறிந்ததால் கடலில் விழுந்த பொற்கொடிகளின் தொகுதி, அறுபட்டு, கடலில் புக்க சூரிய கிரணக் கற்றை போல விளங்கின. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. (38) | 5467. | பெரிய மாமரமும், பெருங் குன்றமும், விரிய வீசலின்,மின் நெடும் பொன் மதில் நெரிய, மாடம்நெருப்பு எழ, நீறு எழ, இரியல்போன,இலங்கையும் எங்கணும். |
பெரிய மா மரமும்- மிகப்பெரிய மரங்களையும்; பெரும் குன்றமும் - பெரிய மலைகளையும்; விரிய வீசலின் - பிளவுபடும்படி (அனுமன்) வீசி எறிந்ததனால்; மின் நெடும் பொன் மதில் நெரிய - பேரொளி கொண்ட நீண்ட பொன் மதில்கள் நெரிந்து தூளாகவும்; மாடம் நெருப்பு எழ நீறு எழ - மாளிகைகள் நெருப்புத் தோன்றிச் சாம்பலாகப் போகவும்; இலங்கையும் எங்கணும் இரியல் போன - இலங்கை அரக்கர் கூட்டங்கள் நிலை கெட்டு எல்லா இடங்களிலும் ஓடின. இலங்கைஆகுபெயரால் இலங்கையில் வாழ்ந்த அரக்கர் கூட்டங்களைக் குறித்தது. (39) சந்திரன் மறைதல் அறுசீர்ஆசிரிய விருத்தம் | 5468. | ‘ “தொண்டை அம் கனி வாய்ச் சீதை துயக்கினால் என்னைச் சுட்டாய்; விண்ட வானவர்கண் முன்னே விரி பொழில் இறுத்து வீசக் |
|