விளங்குவதான; மாசுஅறு மரங்கள் ஆகக் - குற்றமற்ற மரங்களாக; குயிற்றிய - இழைத்து அமைத்த; மதனச் சோலை - மன்மதனுக்கு இருப்பிடமான அசோகவனச் சோலை மரங்கள்; ஆசைகள் தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி வீசிய விளக்கலாலே - எல்லாத் திக்குகளிலும் அனுமன் தன் இருகைகளாலும் வாரி வாரி வீசப்பட்டன வாய் ஒரு பெரிய ஒளியைச் செய்தமையால்; உலகம் எல்லாம் விளங்கின - உலகம் முழுவதும் அந்த இருளில் நன்கு விளங்கின. சந்திரன்மறைந்த பிறகு, ஏற்பட்ட இருள், வீசப்பட்ட மணி ஒளி மிக்க மரங்களின் ஒளியால் அகன்றது. உலகு ஒளியுடன் விளங்கியது. ஆசை - திசை; காம உணர்வு தோன்றுதற்கு ஏற்ப இராவணனால் அமைக்கப்பட்டது ஆதலின் மதனச் சோலையாயிற்று. (41) விலங்கு மற்றும்பறவைகளின் நிலை | 5470. | கதறினவெருவி, உள்ளம் கலங்கின, விலங்கு; கண்கள் குதறின பறவை,வேலை குளித்தன; குளித்திலாத பதறின; பதைத்த;வானில் பறந்தன; பறந்து பார் வீழ்ந்து உதறின, சிறையை;மீள ஒடுக்கின உலந்து போன. |
விலங்கு வெருவிக்கதறின - அசோகவனத்திலிருந்த மிருக இனங்கள் அச்சத்தால் வீறிட்டுக் கத்தின; உள்ளம் கலங்கின - மனக்கலக்கம் அடைந்தன; கண்கள் குதறின - கண்கள் புண்ணாகிப் பொங்கின; பறவை வேலை குளித்தன - அங்கிருந்த பறவை இனங்கள் கடலில் வீழ்ந்து ஆழ்ந்தன; குளித் திலாத பதறின - அவ்வாறு வீழாத பறவைகள்; பதைத்த வானில் பறந்தன - மிகவும் துடித்து, பதறினவாய்; பறந்து பார் வீழ்ந்து சிறையை உதறின - சிறிது தூரம் பறந்து (மேலே பறக்கமுடியாமல்) பூமியில் விழுந்து சிறகுகளை உதறிக் கொண்டன; நீள ஒடுக்கின உலந்து போன - ஒடுக்கிக் கொண்டனவாய் அழிந்து போயின. அனுமன்அசோகவனத்தை அழித்ததால் அங்கிருந்த மிருகங்களும் பறவைகளும் அச்சத்தால் அடைந்த செயல்கள் கூறப்பெற்றன. பறவைகள் சிறகுகளை உதறுவது இறக்குமுன் நிகழ்ந்த சாவுக்கு அறிகுறியாகும். இப்பாடற் செய்திகளை அனுமன் மயேந்திர மலையில் |