பக்கம் எண் :

502சுந்தர காண்டம்

     கார் கொள அரிது- மேக மண்டலத்துக்கும் மேலாக உள்ளது. கால்
கொள அரிது - வாயு மண்டலத்துக்கும் மேலானது. இருளாலும் மறைக்க
முடியாதது என்பதை இருள்கொள அரிது என்ற தொடர் விளக்கிற்று. போல்,
ஆம் - அசைகள்.                                            (50)

5479.

பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி, புதிய பால்
                         பொழிவது ஒக்கும்
திங்களைநக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன,
அம் கைபத்து-இரட்டியான்தன் ஆணையால்,
                        அழகு மாணப்
பங்கயத்துஒருவன்தானே, பசும் பொனால் படைத்தது
                         அம்மா !

     நெடு நாள் -பலநாட்கள் (பதினைந்து நாட்கள்); பொங்கு ஒளி ஈட்டி-
மேன்மேலும் விஞ்சி வருகின்ற ஒளியை, சம்பாதித்து; புதிய பால்
பொழிவது ஒக்கும் திங்களை -
புதிய பாலைச் சொரிவது போன்ற (நிலாவை
வீசுகின்ற) சந்திரனையும்; நக்குகின்ற இருள் எலாம் வாரித்தின்ன -
தீண்டுவதான (களங்கம் எனப்படுகின்ற) இருட்டு முழுவதையும்
அள்ளித்தின்னும் பொருட்டு (போக்கும்படி); அம்கை பத்து இரட்டியான் தன்
ஆணையால் -
அழகிய இருபது கைகளை உடைய இராவணனது
கட்டளையினால்; பங்கயத்து ஒருவன் தானே - தாமரை மலர் மீது விளங்கு
ம்பிரம்ம தேவனே; அழகு மான - அழகு பொருந்தும்படி; பசும்
பொனால்படைத்தது அம்மா ! -
இந்தச் சயித்தம் செய்தது போலும் !

     திங்கள் பால்பொழிவது - சந்திரன் நிலா வீசுவது; பால் உவமை
ஆகுபெயர். பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டிய திங்கள் - பூர்ண சந்திரன்; முழு
நிலவின் களங்கமாகிய இருளைப் போக்குவது மண்டபத்தின் பேரொளி..  (51)

5480.

தூண் எலாம்சுடரும் காசு; சுற்று எலாம் முத்தம்;
                                  சொன்னம்
பேணல் ஆம்மணியின் பத்தி, பிடர் எல்லாம்;
                                ஒளிகள் விம்ம
சேண் எலாம்விரியும் கற்றைச் சேயொளிச்
                                செல்வற்கேயும்
பூணலாம்;எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து
                                அன்றே.