பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்503

                                        503

     தூண் எலாம்சுடரும் காசு - (அந்தச்சயித்தத்தில் உள்ள) தூண்கள்
யாவும் ஒளி விடும் மணிகளால் ஆனவை; சுற்று எலாம் முத்தம் சொன்னம்
-
அதன் சுற்றுப்பக்கமெல்லாம் (பிரகாரம்) முத்துக்களாலும் பொன்னாலும்
இயன்றவை; பிடர் எலாம், பேணல் ஆம் மணியின் பத்தி - அதன் பின்
பக்கமெல்லாம் விரும்பத்தக்க இரத்தினங்களின் வரிசையால் இயன்றவை;
ஒளிகள் விம்ம - ஒளிகள் மிகுதலால்; சேண் எலாம் விரியும் கற்றை
சேயொளிச் செல்வதற்கு ஏயும் -
ஆகாயம் முழுவதும் பரவுகின்ற
தொகுதியான சிவந்த ஒளியையே செல்வமாகக் கொண்ட சூரியனுக்கும் கூட;
பூணல் ஆம் -
ஆபரணமாக அணிவதற்கு உரியதாம் (ஆதலின்); எம்
மனோரால் புகழல் ஆம் பொதுமைத்து அன்று -
எம்மைப்
போன்றவர்களால், புகழ்ந்து சொல்வதற்குரிய பொதுவான காரியம் அன்று.

     சொன்னம் -சொர்ணம்; தங்கம்.                          (52)

அனுமன்சயித்தத்தைப் பெயர்த்து இலங்கைமேல் வீசுதல்

5481.

‘வெள்ளியங்கிரியை, பண்டு, வெந் தொழில் அரக்கன்,
                             வேரோடு
அள்ளினன்’என்னக் கேட்டான்;
அத் தொழிற்கு
                             இழிவு தோன்ற,
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான்
                             போல,
வள் உகிர்த்தடக் கைதன்னால் மண்நின்றும்
                             வாங்கி, அண்ணல்,

     அண்ணல் -பெரியோனான அனுமன்; வெம் தொழில் அரக்கன் -
கொடிய தொழிலை மேற் கொண்ட அரக்கனாகிய இராவணன்; பண்டு,
வெள்ளி அம் கிரியை வேரோடு அள்ளினன் என்ன கேட்டான் -
முற்காலத்தில், வெள்ளி மலையாகிய அழகிய கைலாசத்தை வேரோடு பறித்
தெடுத்தான் என்று, (உலகோர் சொல்லக்) கேட்டவனாய்; அத் தொழிற்கு
இழிவு தோன்ற -
அந்தச் செயலுக்குக் குறைவு உண்டாகுமாறு; புள்ளி
மாமேரு என்னும் பொன் மலை எடுப்பான் போல -
பல நிறம் கொண்ட
பெரிய மேரு எனப்படும் பொன் மலையை எடுப்பவன் போல; வள் உகிர்
தடக்கை தன்னால் -
கூர்மையான நகங்களை உடைய தனது