பக்கம் எண் :

கடல் தாவு படலம்51

உயர்கின்றஉயர்ச்சியைப் பார்த்து; பார்மேல் தவழ் சேவடி - பூமியிலே
தவழ்கின்ற சிவந்த பாதங்கள்; பாய் நடவாப் பதத்து - பூமியிலே பதிந்து
நடவாத பருவத்திலே; என் தேர்மேல் குதி கொண்டவன் - என்னுடைய
தேரிலே குதித்த இந்த அனுமன்; இத்திறன் - இப்படி; ஆர்மேல் சிந்தை
செய்தான் கொல் -
எவர்மேல் பாயக் கருதுகிறானோ; என்று எண்ணி -
என்று கருதி; ஐயம் உற்றான் - சந்தேகம் அடைந்தான்.

     அனுமன்கடலைவிடப் பெரிதாக வளரும் உயர்ச்சியை நோக்கிய
சூரியன், தவழ்கின்ற பருவத்தில் என் தேர்மேல் பாய்ந்தான். இப்போது
யார்மேல் பாய்கின்றானோ என்று ஐயம் உற்றான். பெரிய பொருளுக்கு
உவமையாக்கப்படுவது கடல். அதனால் கடல்மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி
என்பதற்கு இங்ஙனம் கூறப்பெற்றது.                            (63)

4804.

வாள் ஒத்துஒளிர் வால்எயிறு ஊிழின்
     மருங்குஇமைப்ப
நீள்ஒத்துஉயர்வாலின் விசும்பு
     நிரம்புமெய்யன்
கோள்ஒத்தபொன்மேனி விசும்பு இரு
     கூறுசெய்யும்
நாள் ஒத்தது;மேல்ஒளி கீழ் இருள்
     உற்றஞாலம்.*

     வாள்ஒத்துஒளிர்வால் எயிறு - வாளைப் போலப்பிரகாசிக்கும்
வெண்மையான பற்கள்; மருங்கு ஊழின் இமைப்ப - பக்கத்தில் முறையாக
ஒளிவீச; நீள்ஒத்து உயர் வாலின் - நீளத்தைப் பெற்று உயர்ந்த வாலினாலே;
விசும்பு நிரம்பு - ஆகாயத்தை நிறைவுபெறச் செய்யும்; மெய்யன் - சத்திய
வடிவான அனுமனின்; கோள் ஒத்த பொன்மேனி - வலிமை மிக்க
பொன்னிறமான திருமேனி; விசும்பு இரு கூறு செய்யும் - ஆகாயத்தை
இரண்டு விதமாகக் கூறுபடுத்தும்; நாள் ஒத்தது - நாளைப் போன்றிருந்தது;
ஞாலம் - உலகமானது; மேல் ஒளி கீழ் இருள் உற்ற - மேலே ஒளியையும்
கீழே இருளையும் அடைந்த.

     அனுமனின்திருமேனியின் விரிவால் பூமியில் இருள் உண்டாயிற்று.
அவனுக்கு மேலே ஒளி இருந்தது. ஆதலால் அவன் ஒளியையும் இருளையும்
உண்டாக்கும் நாளைப் போன்றிருந்தான்.