மடிக்கும் வாயர்- (கோபத்தால்) மடிக்கின்ற உதட்டை உடையவர்களாகிய அந்த அரக்கர்கள்; வெய்து உறு படையின் மின்னர் - கொடுமை மிகுந்த ஆயுதங்களான மின்னலை உடையவர்களாய்; வில்லினர், வீசு காலர் - விற்களை உடையவர்களாய், வீசுகின்ற மூச்சுக் காற்றை உடையவர்களாய்; மை உறு விசும்பின் தோன்றும் மேனியர் - மேகம் பொருந்திய வானம் போன்ற கரிய உடம்பை உடையவர்களாய்; கைபரந்து, உலகு பொங்கி கடையுகம் முடியும் காலை - பக்கங்களில் பரவி, உலகின் மீது (கடல்கள்) பெருக்கெடுத்து யுகங்கள் முடியும் காலத்தில்; பெய்ய என்று எழுந்த மாரிக்கு - பெரு மழைபெய்வதற்கு மேற்கிளம்பிய மேகத்துக்கு; உவமை சால் பெருமை பெற்றார் - உவமையாதற்கு ஏற்ற பெருமையைப் பெற்றவர்களாய் விளங்கினர். அந்த அரக்கவீரர் பிரளய காலத்தில் வானத்துத் தோன்றும் மேகக் கூட்டத்தை ஒத்தனர் என்பதாம். (10) | 5499. | ‘பனி உறுசெயலை சிந்தி, வேரமும் பறித்தது, அம்மா ! தனி ஒரு குரங்குபோலாம் ! நன்று நம் தருக்கு !’ என்கின்றார் ! ‘இனி ஒரு பழிமற்று உண்டோ இதனின் ?’ என்று இரைத்துப் பொங்கி, முனிவுறு மனத்தின்தாவி, முந்துற முடுகுகின்றார். |
பனிஉறு செயலைசிந்தி - குளிர்ச்சி பொருந்தியஅசோகவனச் சோலையை அழித்து; வேரமும் பறித்தது - அங்கிருந்த சயித்த மண்டபத்தையும் அடியோடு பெயர்த்து அழித்தது; தனி ஒரு குரங்கு போலாம் - தனியாய் வந்த ஒரு குரங்கு என்றால்; நன்று நம்தருக்கு என்கின்றார் - நம் வலிமை நன்றாயிருந்தது என்று சொல்கின்றவர்களாய்; இதனின் மற்று ஒரு பழி இனி உண்டோ - இதைவிட வேறொரு அவமானம்அரக்கர் குலத்துக்கு இன்னும் உள்ளதோ ?; என்று இரைத்து - என்றுஆரவாரம் செய்து; பொங்கி - கொதித்து; முனிவுறு மனத்தின் தாவி முந்துறமுடுகு கின்றார் - கோபம் கொண்ட மனத்தோடு முற்பட விரைந்து செல்பவரானார்கள். வேரமும்; உம்மை,உயர்வு சிறப்பு. குரங்கு போலாம் என்பது இழிவுப் பொருளில் ஒப்பில் போலியாக வந்தது. (11) |