பக்கம் எண் :

52சுந்தர காண்டம்

மெய்யன் என்பதற்குஉடம்பைப் பெற்றவன் என்று கூறின், வானை நிரப்பியது
வாலா, மேனியா என்னும் ஐயப்பாடும் இவனுக்குக் குறைவும் உண்டாக்கும்.
ஆதலின் மெய்யன் என்பது அனுமன் என்று கூறப்பட்டது. ‘மெய்ம்மை
பூண்டான்’ என்று 61-ஆம் பாடல் பேசும். கோள் - வலிமை.        (64)

4805.

மூன்றுற்றதலத்திடை முற்றிய
     துன்பம்வீப்பான்
ஏன்றுற்றுவந்தான் வலி மெய்ம்மை
     உணர்த்துநீ என்று
ஆன்றுற்றவானோர் குறை நேர
     அரக்கிஆகித்
தோன்றுற்றுநின்றாள் சுரசைப் பெயர்ச்
     சிந்தைதூயாள்.
 

     ஆன்று உற்றவானோர் - அறிவு நிரம்பி அங்கு வந்த தேவர்கள்;
உற்ற மூன்று தலத்திடை - பொருந்திய மூன்று உலகத்தில்; முற்றிய துன்பம்
வீப்பான்
- முதிர்ந்த துன்பத்தை ஒழிக்கும்படி; ஏன்றுற்று வந்தான் -
ஏற்றுக்கொண்டு வந்துள்ள அனுமானின்; மெய்ம்மை வலிநீ உணர்த்து -
வலியின் உண்மையை எங்கட்கு நீ அறிவிப்பாயாக; என்று குறை நேர -
என்று வேண்டிக் கொள்ள; சுரசைப்பெயர் சிந்தை தூயாள் - சுரசை என்ற
பெயரை உடைய தூய மனத்தைஉடையவள்; அரக்கி ஆகி
தோன்றுற்றுநின்றாள்
-(அனுமனுக்கு எதிரில்)அரக்கி வடிவத்துடன் தோன்றி
நின்றாள்.

     அனுமன் வலிமையைஎங்கட்கு அறிவிக்க என்று தேவர் வேண்டிக்
கொள்ள சுரசை அரக்கியாகி அனுமனுக்கு எதிரே தோன்றினாள். சுரசையை,
தாட்சாயணி என்றும், நாகமாதா என்றும் கூறுவர். வால்மீகம், நாகமாதா (சுந்தர
1-162) என்றும், தாட்சாயணி (சுந்தர 187) என்றும் கூறும்.             (65)

4806.

பேழ்வாயொர் அரக்கி உருக்கொடு
     பெட்பின்ஓங்கி
கோள்வாய் அரியின் குலத்தாய்; கொடுங்
     கூற்றும்உட்க
வாழ்வாய் எனக்குஆமிடமாய் வரு
     வாய்கொல் என்னா