எவரினும் அதிகம்உயர்ந்தான் - யாவரினும் மிகவும்சிறந்த அனுமன்;முந்தே - முதலில்; இது இதம் இயல் - தான், இந்த அசோகவனத்தைஅழித்தது நல்ல செயல் என்று; இயைவுற இனிது தெரிந்தான் -பொருத்தமாக நன்கு அறிந்து கொண்டான்; பதம் இயல் அறிவு பயந்தால் -பக்குவமுடைய அறிவு தோன்றினால்; அதின் நல பயன் உளது உண்டோ -அதைக் காட்டிலும் நல்லதான பயன் தரத்தக்கது வேறு உண்டோ ?(இல்லையென்றபடி); கடிபொழில் சிதைவு இயல் ஒன்றே - காவலுள்ளஅசோக வனத்தை அழித்ததான செய்கை ஒன்று மட்டுமே; சிதறிய செயல்தரு திண்போர் உதவு இயல் - (அரக்கர்) தோற்றோடுகின்ற செயலைஉண்டாக்கக் கூடிய வலிய போரை உதவி நின்ற தன்மைகண்டு; இனிதின்உவந்தான் - பெரிதும் மகிழ் வெய்தினான். முதலடியில் கூறப்பெற்ற செய்திக்கு இரண்டாம் அடி காரணமாய் அமைந்துள்ளது. வேற்றுப் பொருள் வைப்பணி. (21) அரக்கர், படைகளை ஏவ அனுமன் ஒரு மரத்தால்எதிர்த்தல் | 5510. | ‘இவன் ! இவன் ! இவன் !’ என நின்றார்; ‘இது !’ என, முதலி எதிர்ந்தார்;- பவனனின் முடுகிநடந்தார், பகல் இரவு உற மிடைகின்றார்- புவனியும், மலையும், விசும்பும், பொரு அரு நகரும், உடன் போர்த் துவனியில் அதிர,விடம்போல் சுடர் விடு படைகள் துரந்தார். |
பவனனின் முடுகி்நடந்தார் - காற்றை விட விரைவாகநடந்து வந்த அரக்கர்கள்; பகல் இரவு உறமிடை கின்றார் - பகற்காலத்திலேயே இரவு போல இருளாகும் படி நெருங்கி; இவன் இவன் இவன் என நின்றார் - இவன்தான் இவன்தான் இவன் என்று குறிப்பித்துக் காட்டுபவர்களாய்; இது என முதலி எதிர்ந்தார் - இதுவே அந்தக் குரங்கு என்று சொல்லி, முற்பட்டு எதிர்ப்பவர்களாகி; புவனியும் மலையும் விசும்பும் பொருவரு நகரும் - பூமியும் மலையும், ஆகாயமும், ஒப்பில்லாத இலங்கை நகரமும்; உடன் போர்த் துவனியில் அதிர - ஒரு சேரப் போர் முழக்கத்தினால் நடுங்கும் படியாக; விடம் போல் சுடர் விடு படைகள் துரந்தார் - |