பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்527

5515.

புடையொடு விடு கனலின் காய் பொறியிடை,
                       மயிர்கள் புகைந்தார்;
தொடையொடு முதுகுதுணிந்தார்; சுழிபடு குருதி
                       சொரிந்தார்;
படை இடை ஒடிய,நெடுந் தோள் பறி தர, வயிறு
                       திறந்தார்;
இடை இடை,மலையின் விழுந்தார்-இகல் பொர
                       முடுகி எழுந்தார்.

     இகல் பொர முடுகிஎழுந்தார் - போர் செய்வதற்குவிரைந்து எழுந்த
சில அரக்கர்கள்; புடையொடு விடு கனலின் காய் பொறியிடை - அனுமன்
அடிக்கின்ற அடியுடனே வெளிப்படுகின்ற நெருப்பினுடைய எரிக்கின்ற
தீப்பொறிகளிலே; மயிர்கள் புகைந்தார் - தம் மயிர்கள் புகையப் பெற்றனர்;
தொடையொடு முதுகு துணிந்தார் -
சிலர், தம் தொடைகளோடு முதுகும்
துண்டிக்கப் பெற்றார்; சுழிபடு குருதி சொரிந்தார் - சுழிகள் உண்டாக இரத்
தவெள்ளங்களைக் கக்கினார்கள்; படை இடை ஒடிய நெடும் தோள்
பறிதர - 
தம் கையில் கொண்ட ஆயுதங்கள் நடுவே ஒடிந்து போக நீண்ட
தோள்கள்உடலிலிருந்து வேறாகிப் போக; வயிறு திறந்தார் - தம் வயிறும்
பிளக்கப்பட்டவர்களானார்கள் சிலர்; இடை இடை மலையின் விழுந்தார் -
பயந்து ஓடியவர்கள், போர்க் களத்தின் இடையே பல இடங்களில் மலை
போல விழுந்தார்கள்.                                        (27)

5516.

புதைபட இருளின் மிடைந்தார், பொடியிடை நெடிது
                                  புரண்டார்;
விதைபடும்உயிரர் விழுந்தார்; விளியொடு விழியும்
                                  இழந்தார்;
கதையொடு முதிரமலைந்தார், கணை பொழி
                           சிலையர் கலந்தார்,
உதைபட உரனும்நெரிந்தார்; உதறொடு குருதி
                           உமிழ்ந்தார்.

     கதையொடு முதிரமலைந்தார் - தண்டாயுதங்களுடன்நன்றாகப்
போர்செய்தவர்களும்; கணைபொழி சிலையர் கலந்தார் - அம்புகளைச்
சொரிகின்ற விற்களை உடையவர்களும்