| | கொற்றவாலிடைக் கொடுந் தொழில் அரக்கரை அடங்கச் சுற்றி வீசலின்,பம்பரம் ஆம் எனச் சுழன்றார். |
பற்றித் தாளொடுதோள் பறித்து எறிந்தான் - (அனுமன் சில அரக்கர்களை) பிடித்து, அவர்களது கால்களையும் தோள்களையும் பிய்த்து வீசினான்; வெம்சிறை இற்ற வெற்பு இனம் ஆம் என பாரின் கிடந்தார் - (கால்களும் தோள்களும் அற்ற அரக்கர்கள்) கொடிய இறகுகள் அறுபட்ட மலைக்கூட்டங்கள் போல பூமியில் விழுந்து கிடந்தனர்; கொற்ற வாலிடை அடங்க - வெற்றி பொருந்திய தனது வாலிலே அடக்கியிருக்கச் செய்து; கொடும் தொழில் அரக்கரை சுற்றி வீசலின் - கொடிய செயல்களை உடையசில அரக்கர்களைச் சுழற்றிய வீசியதனால்; பம்பரம் ஆம் என சுழன்றார் -பம்பரம் போலச் சுழன்றார்கள். அனுமன் வால்,கயிறாகவும், அரக்கர்கள் பம்பரங்களாகவும், அனுமன் பம்பரம் விடுவோனாகவும், இங்கு உவமிக்கப் பெற்றுள்ளன. (30) | 5519. | வாள்கள் இற்றன; இற்றன வரி சிலை; வயிரத் தோள்கள்இற்றன; இற்றன சுடர் மழுச் சூலம்; நாள்கள் இற்றன;இற்றன நகை எயிற்று ஈட்டம்; தாள்கள் இற்றன;இற்றன படையுடைத் தடக் கை. |
வாள்கள் இற்றன- (அனுமன்தாக்கியதனால்) அரக்கர் சிலரது வாள்கள் ஒடிந்து போயின; வரி சிலை இற்றன - கட்டமைந்த விற்கள் முறிந்து போயின; வயிரத் தோள்கள் இற்றன - சிலரது வயீரம் போன்ற தோள்கள் அற்றுப் போயின; சுடர் மழுச்சூலம் இற்றன - ஒளியுள்ள மழுக்களும் சூலங்களும் முறிந்து போயின; தாள்கள் இற்றன - சிலரது கால்கள் ஒடிந்தன; நாள்கள் இற்றன நகை எயிற்று ஈட்டம் இற்றன - நட்சத்திரங்கள் விழுவதைப் போல. ஒளி விளங்கும் பற்களின் தொகுதிகள் அற்றுவீழ்ந்தன; படை உடைத்தடக்கை இற்றன - அவர்களின் ஆயுதங்களை உடைய கைகள் அற்று வீழ்ந்தன. நகை எயிறுகளுக்குநட்சத்திரங்கள் உவமை. இச்செய்யுள் சில சுவடியில் இல்லை. வருணனை மயமாகத் தொடர்ந்து மிகப் பல பாடல்கள் பாடுவது அருமையான திறனைக் காட்டுவதாகும். பாடுவது |